Friday, July 31, 2009

கடலும் துளியே

துளியே கடல்
என்கிறது காதல்...

கடலும் துளியே
என்கிறது உன் நட்பு...

உன்னக்காக..

எனக்கு
அழுவதுகூட
மிகவும்
பிடிக்கிறது
அது
உன்னக்காக
எனும்போது..

Wednesday, July 29, 2009

உன் நினைவுகளில்

என்னிடம்
உன் நினைவுகள்
இல்லவே இல்லை...
உன் நினைவுகளில்தான்
நான் இருக்கிறேன்...

அனாதை

அன்னையை
இழந்த
அனாதையின்
நினையை
உணர்கிறேன்
உன் பிரிவில்...

எனக்கு சம்மதமே

நீ கிடைக்கலாம்
கிடைக்காமல் போகலாம்...
ஆனால்,
உன்னால் கிடைக்கும்
எதுவும் எனக்கு சம்மதமே...

Wednesday, July 22, 2009

என் மனம்!!!!

இதயம் கூட
இடைவெளி விட்டுதான்
துடிக்கும் தினம்!!
அந்த
இடைவெளியில் கூட
உன்னைப் பற்றிதான்
நினைக்கும் என் மனம்!!!!

நீ இருக்கும் வரை...

நான் உயிர்த்திருப்பேன்
என் இதயம் துடிக்கும் வரை...

என் இதயம் துடித்திருக்கும்
அதில் நீ இருக்கும் வரை...

எனது கண்ணீர்

வானத்தின் கண்ணீர்
பூமிக்கு மழையானது..
பூமியின் கண்ணீர்
புற்களில் பனித்துளியானது..
எனது கண்ணீர்
உனக்காக கவிதையானது..

உன் வார்த்தைகள்

நீ என்னிடம் பேசியதை விட
எனக்காக பேசிய போதுதான
உணர்ந்தேன் உன் நட்பின் ஆழத்தை....
என்றும் கேட்கும்

உன் வார்த்தைகள்
என் காதினில் மெலிசையாய்....

என்றும் வாழும்

மனிதர்கள் இறந்து போகலாம்
நினைவுகள் இறப்பதில்லை...
என்னுள் மேலும் ஓர் உயிராய்
என்றும் வாழும்உன் நினைவுகள்!!!!!