Thursday, February 24, 2011

நீ இல்லாத நேரங்களில்

நீ இல்லாத நேரங்களில்,
என் இதயத்தோடு தான்
பேசிக்கொள்கிறேன்...
எனக்காக,
துடிப்பது அது தானே...
உன்னைப் போல...

Saturday, February 12, 2011

வரமும் தவமும்

உன்னோடு இருப்பதற்கும்
உன் நினைவோடு இருப்பதற்கும்
சிறு வித்தியாசம் தான்...

உன்னோடு இருப்பது "வரம்"
உன் நினைவோடு இருப்பது "தவம்"

இனிய காதலர் தின வாழ்த்துக்கள்...

Friday, February 4, 2011

அன்னை


அன்னையை பார்க்கும் போது,
உன்னை மறந்து போகிறேன்...
ஆனால்,
உன்னை பார்க்கும் போது
அன்னையை நினைவுபடுத்துகிறாய்...

Thursday, January 27, 2011

உன்னுடன்

உன்னுடன் பேசுகிறேன்...
உன்னுடன் நடக்கிறேன்...
உன்னுடன் ஓடுகிறேன்...
உன்னுடன் பாடுகிறேன்...
உன்னுடன் ஆடுகிறேன்...
உன்னுடன் சிரிக்கிறேன்...
உன்னுடன் அழுகிறேன்...
எல்லாமே உன்னுடன்தான்...

என்னுடன் இருக்கும் உன்னை
வேறு யாருக்கும் தெரிவதில்லை...

என்னை
ஏதேதோ பெயர்களில்
அழைக்கிறார்கள்...
எல்லா அழைப்புகளும்
உன் பெயர்களாகவே கேட்க்கிறது...

என்னை யாராவது
பைத்தியம் என்றழைத்தால்
மட்டும்
உன்னுடன் கோபம்கொள்கிறேன்....!!!

Wednesday, January 12, 2011

உயிர் வாழ்வேன்

சுவாசிக்க
காற்று இல்லையென்றாலும்
நான் உயிர் வாழ்வேன்...

நேசிக்க
நீ
இருக்கும் வரை...

Tuesday, January 11, 2011

நான்

நினைக்கும் போது
உன் அருகினில் இருப்பவள்
அல்ல நான்...
நீ அருகினில் இல்லாத போதும்
உன்னையே
நினைத்துக்கொண்டு இருப்பவள்
என்றும்...

Saturday, January 8, 2011

உன் ஒற்றைப் பார்வை

சந்திக்கும் வேளைகளில்
சிந்திக்க நேரமில்லை
உன்னுடன் பேச
நான் இட்ட பட்டியல்களை...

முகம் பார்க்க முடியாமல்
வெட்கத்தின் போர்வையில்
மண்ணைக் கிளரும் கோழியாக
உன் முன்
தலை குனிந்தபடி நான்...

கவிதை சொல் endru
கேட்க்கும் உன்னிடம்
நொடிக்கொரு முறை
என் மௌனம் உச்சரிக்கும்
உந்தன் பெயர்
உன் காதில் விழவில்லையா? என
எப்படிக் கேட்பேன்...

அம்மாவின் நெற்றி முத்தம்...
அப்பாவின் கேச வருடல்...
அண்ணனின் செல்ல அடி...
நண்பனின் தோள் அணைப்பு...
என அத்தனையையும்
ஒரே நொடியில் தருகிறது
உன் ஒற்றைப் பார்வை...


- இவள்
மா.ஐஸ்வர்யா,
நோயாளிகளின் ஆலோசகர்,
கண் நீர் அழுத்தப் பிரிவு,
அரவிந்த் கண் மருத்துவமனை,
மதுரை - 20

Saturday, January 1, 2011

இனிய புத்தாண்டு 2011 வாழ்த்துக்கள்

கவலைகளை சுமந்து
கண்ணீர் சிந்துவதை விட,
லட்சியங்களை சுமந்து
ரத்தம் சிந்து….
உலகம் உன்னை போற்றும்...

இந்த புதிய வருடம்
உனது இலட்சியங்கள்
அனைத்தும் நிறைவேற
இறைவனை வேண்டிகொள்கிறேன்…

அனைவருக்கும்
இனிய
புத்தாண்டு 2011
வாழ்த்துக்கள்...

Tuesday, December 28, 2010

உன் கோவமும் அன்பும்

உன் கோவம்
உன்னை நேசிப்பவர்களை
யோசிக்க வைக்கும்...
ஆனால்,
உன் அன்பு,
உன்னை வெறுப்பவர்களையும்
நேசிக்க வைக்கும்...

உணர்ந்தேன்

பிறப்பை
நான் பிறந்து
உணர்ந்தேன்...
இறப்பை
நான் இறக்காமல்
உணர்ந்தேன்...

நீ இல்லாத நேரங்களில்...

Sunday, December 26, 2010

உறக்கத்தில்

உறக்கத்தில்
உன் சத்தம் கேட்டு
எழுந்து விட்டேன்...
ஆனால்,
நீ இல்லை...
பின்பு தான்
தெரிந்தது,
அது,
என் இதயத்தில்
துடித்துக்கொண்டிருக்கும்
உன் நினைவுகள்
என்று...

நான்

உன்னை,
உறக்கத்தில் நினைப்பவள்
அல்ல நான்,
உறங்காமல் நினைப்பவள்
என்றும்...

Saturday, December 25, 2010

பிறக்கிறாய்

என்னை விட்டு
பிரிந்தும்,
தினம் தினம்
பிறந்துகொண்டே
இருக்கிறாய்

நினைவுகளால்...

Tuesday, December 21, 2010

நாட்கள் இல்லை

வின்னில நிலவு
இல்லாத நாட்களும் உண்டு...
மண்ணில் மழை
இல்லாத நாட்களும் உண்டு...


ஆனால்,
என்னில் உன் நினைவு
இல்லாத நாட்கள் இல்லை...

Saturday, December 18, 2010

என்னை மறந்துவிடாதே

பூத்த மலரை கிள்ளிவிடாதே...
கிள்ளிய மலரை சூடிவிடாதே...
சூடிய மலரை வாடவிடாதே...
வாடிய மலரை எறிந்துவிடாதே...
எறிந்த மலரைப் போல்
என்னை மறந்துவிடாதே....

Tuesday, December 14, 2010

உன் நினைவுகள்


உன் நினைவுகளில்
உயிர் இல்லை
ஆனால்,
நான் உயிர் வாழ
காரணம்
உன் நினைவுகள் தான்...

Monday, November 29, 2010

உள்ளச் சிறையில் நான்

உள்ளச் சிறையில் நான்
நான் என் விடுதலையை விரும்பவில்லை
நீ என் விடுதலையை விரும்பினால்,
என் உடல் என் உயிரின் விடுதலையை விரும்பும்.

Monday, October 11, 2010

ஒற்றை பனித்துளி

அதி காலை பொழுது,
அமைதியாய் பனி பொழி
காலம்....

சற்று முன் பிறந்த பனித்துளி...

தான் அறியா? புவியை நோக்கி
ஆவலுடன்....

இனம் புரியா..

இரகசியம்...
சொல்லிபுரியா அனுபவம்...

முதன் முதலாய் முத்தமிட்டது..

தான் விழுந்த மலரின்
இதழ் ஓரத்தில்....

அட ...!

எத்தனை மென்மை...
கவர்ந்திழுக்கும் வண்ணத்தில்
வசமிழுக்கும் வாசனை ...!

வர்ணிக்க தெரியா

பிஞ்சு பனித்துளி
முழுவதுமாய் இரசிப்பதற்குள்...!

ஒய்யாரமாய் பறந்து வந்த

பட்டாம்பூச்சி...!
படக்கென அமர்ந்தது
பனி இரசித்த மலர்மேலே...!

பயந்து போன பனித்துளி...

மலர்ந்து விட்ட மலரை விட்டு
இறங்கியது...
மலர் பாரம் தாங்காது என்று ....

வேறொன்றை

மீண்டும் முத்தமிட
மறுத்த பனித்துளி
மொதிச் சிதைந்தது ..
புவி மேலே....

யாருக்கு புரியும்.....

இந்த ஒற்றை பனித்துளியின்
காதல்...
அந்த ஒரு நிமிடம் தாங்கிய
மலர் மேலே...!



--- படித்ததில் பிடித்தது....

Tuesday, July 13, 2010

என் பயணங்களில்

வேகமாய்
கடக்கும் மரங்கள்...
உயரமாய்
பறக்கும் பறவைகள்...
அருகில் அமர்திருக்கும்
ஜன்னல் கம்பிகள்...
என் கவனத்தை
ஈர்க்க முயலும்,
மோதும் காற்றுமாய்...

நான் ரசிக்க
ஆயிரம் இருப்பினும்,
என்னை ரசித்த
உன்னையே நினைக்கிறேன்
என் பயணத்தில்...

அன்று உன்னைப் பார்த்தது,
அன்று உன்னுடன் பேசியது,
அன்று உன்னில் புதைந்தது,
என்று "அன்றையே"
நினைக்கச் செய்கிறாய்...

தனிமை துயரைப்
போக்குவதாய் எண்ணி,
என்னை தவிக்க விடுகிறாய்...
தடுமாற செய்கிறாய்...

விபரீத விளைவுகள
அறிந்தும் விரும்பியே
உன்னை நினைக்கிறேன்...

என் அனைத்துப் பயணங்களிலும்
உன்னுடனே பயணிக்கிறேன்
"தனியாக..."


- இவள்
மா.ஐஸ்வர்யா,
நோயாளிகளின் ஆலோசகர்,
கண் நீர் அழுத்தப் பிரிவு,
அரவிந்த் கண் மருத்துவமனை,
மதுரை - 20

Friday, July 9, 2010

உன் நினைவில்

என் மனதை,
உன் நினைவுகளால்
நிரப்பியுள்ளேன்...

என் இதயம்,
உன்னை நினைப்பதாலேயே
துடிக்கிறது...

நாளும் உன் நினைவில்
நீளும் என் ஆயுள்...