Wednesday, August 5, 2009

பிரிவு இல்லை

மலர்ந்த பூவில் வண்டு இல்லை
பரந்த கடலில் அலை இல்லை
திறந்த வானில் கதவு இல்லை
சிறந்த நட்பில் பிரிவு இல்லை....

காதலும் நட்பும்

இதயம் கொடுத்து,
உயிரை பறிப்பது
காதல்....
உயிரை கொடுத்து,
இதயங்களை பெறுவது
நட்பு....

தாய்மையின் விதை

தாய்பாலுக்கான விதை
காதலில் இருக்கிறது...
தாய்மைக்கான விதை
நட்பில் இருக்கிறது...

Tuesday, August 4, 2009

விவாதம் செய்யாதே

நீ
யாரிடமும் விவாதம்
செய்யாதே...
அதில்
தோற்றால்,
ஒரு நம்பிக்கையை
இழப்பாய்...
வெற்றி பெற்றால்,
ஒரு எதிரியை
பெறுவாய்....

Monday, August 3, 2009

அருகில் இருப்பாயா???

அருகில் இருப்பவர்கள்
எல்லாரும் அன்பானவர்கள் இல்லை...

அன்பானவர்கள் எல்லாரும்
அருகில் இருப்பதும் இல்லை...
உன்னைப் போல...

பிரிவதில்லை

பார்த்த முகங்கள்
கண்ணை விட்டு
பிரியலாம்...
ஆனால்,
பழகிய இதயங்கள்
நெஞ்சை விட்டு
பிரிவதில்லை...

Saturday, August 1, 2009

உன் இருப்பிடம்

உன் பிறப்பிடம்
வேறு என்றாலும்...
எப்போதுமே,
உன் இருப்பிடம்
என் இதயம் தான்...

காயப்படுத்தாதே

இதயத்தைக்
காயப்படுத்தாதே...
அதில் இருப்பது
நீ தான் என்று
உனக்கு தெரியாதா?...

ஓர் ஒற்றுமை

உன் கண்களுக்கும்,
உன் பேனாவிற்கும்,
ஓர் ஒற்றுமை
இரண்டுமே
குத்திக் கிழிப்பது
என் இதயத்தை அல்லவா...

ஞாபகங்கள்

அன்று
நீ தந்து விட்டு போன
உன் ஞாபகங்கள்...
இன்றும்
என் நெஞ்சில்
மறையாத சுவடுகளாய்...