Thursday, November 12, 2009

தொலைந்த மனம்

எங்கேயோ தொலைந்த மனம்
என்னிடமே வந்து சேர்க்கிறது
நீ என்னோடு பேசுகையில்...

யாரும் இல்லை

உன்னை வெல்வதற்கு
யாரும் இல்லை
என் அன்பை தவிர...
என்னை கொல்வதற்கு
யாரும் இல்லை
உன் பிரிவை தவிர....

நான்

தோழா..
நான் உனக்காக
வாழ்பவள் அல்ல...
உன்னால் வாழ்பவள்...

Wednesday, November 11, 2009

ஒரேழுது கவிதை

ஒரு எழுத்தில்
அன்பு, நட்பு பற்றி
கவிதை எழுத சொன்னாய்
நீ சொல்லி முடிக்கும் முன்னே
நான் எழுதி முடித்தேன்
"நீ"

Monday, November 9, 2009

என் மரணம்

உன் அன்பு மட்டுமே
என் நேசிப்பு ...
உன் வார்த்தை மட்டுமே
என் கவிதை ...
உன் பார்வை மட்டுமே
என் வெட்கம் ...
உன் ஸ்பரிசம் மட்டுமே
என் உணர்வு ...
உன் சுவாசம் மட்டுமே
என் மூச்சு...
உன் இதயம் மட்டுமே
என் இருப்பிடம்...
உன் கோபம் மட்டுமே
என் கண்ணீர்...
உன் வேதனை மட்டுமே
என் வலிகள்...
நீ மட்டுமே நான் ...
உன் பிரிவு மட்டுமே

என் மரணம்...

Sunday, November 8, 2009

யாதுமாகினாய்...

சுடும் என் சுவாசத்தை கேள்
அது சுகமாய் ஜனிப்பது
உன்பெயர் தான்...
சுற்றும் என் விழிகளை பார்
அதில் சுடராய் தெரிவதும்
உன்முகம் தான்....
உயிரில் ஒலிக்கும்
என் மொழி கேள்
அதில் மறந்தும் ஒலிப்பது
உன்குரல் தான்...

Friday, November 6, 2009

ஒவ்வொரு நிமிடமும்

என்னுள் கரைந்த நீ ,
உன்னுள் தொலைந்த என்னை ,
நினைக்கும் ஒவ்வொரு நிமிடமும் ,
என் மனமும் உன்னை நேசிக்கும் ,
நினைக்காத நிமிடமும்
உன் அன்பை சுவாசிக்கும் ..

சிறகுகள்

நான்
பறப்பதற்கு
சிறகுகள்
தேவையில்லை...
நீயும்
உன் அன்பும்
போதுமே...

ஒரு தாய்

இரு வேறு கருவில்
உருவானபோதும் ,
நட்பெனும்
ஒரு தாய்க்கு
பிள்ளைகள் ஆனோம்...

வேண்டும்

மரணமே வந்தாலும்
உன்னை மறக்காத
இதயம் வேண்டும் ...
இன்னும்
ஒரு ஜென்மம் என்றால்
நீயே வேண்டும்
என்னுயிர் தோழனாய்...