Monday, November 29, 2010

உள்ளச் சிறையில் நான்

உள்ளச் சிறையில் நான்
நான் என் விடுதலையை விரும்பவில்லை
நீ என் விடுதலையை விரும்பினால்,
என் உடல் என் உயிரின் விடுதலையை விரும்பும்.

Monday, October 11, 2010

ஒற்றை பனித்துளி

அதி காலை பொழுது,
அமைதியாய் பனி பொழி
காலம்....

சற்று முன் பிறந்த பனித்துளி...

தான் அறியா? புவியை நோக்கி
ஆவலுடன்....

இனம் புரியா..

இரகசியம்...
சொல்லிபுரியா அனுபவம்...

முதன் முதலாய் முத்தமிட்டது..

தான் விழுந்த மலரின்
இதழ் ஓரத்தில்....

அட ...!

எத்தனை மென்மை...
கவர்ந்திழுக்கும் வண்ணத்தில்
வசமிழுக்கும் வாசனை ...!

வர்ணிக்க தெரியா

பிஞ்சு பனித்துளி
முழுவதுமாய் இரசிப்பதற்குள்...!

ஒய்யாரமாய் பறந்து வந்த

பட்டாம்பூச்சி...!
படக்கென அமர்ந்தது
பனி இரசித்த மலர்மேலே...!

பயந்து போன பனித்துளி...

மலர்ந்து விட்ட மலரை விட்டு
இறங்கியது...
மலர் பாரம் தாங்காது என்று ....

வேறொன்றை

மீண்டும் முத்தமிட
மறுத்த பனித்துளி
மொதிச் சிதைந்தது ..
புவி மேலே....

யாருக்கு புரியும்.....

இந்த ஒற்றை பனித்துளியின்
காதல்...
அந்த ஒரு நிமிடம் தாங்கிய
மலர் மேலே...!



--- படித்ததில் பிடித்தது....

Tuesday, July 13, 2010

என் பயணங்களில்

வேகமாய்
கடக்கும் மரங்கள்...
உயரமாய்
பறக்கும் பறவைகள்...
அருகில் அமர்திருக்கும்
ஜன்னல் கம்பிகள்...
என் கவனத்தை
ஈர்க்க முயலும்,
மோதும் காற்றுமாய்...

நான் ரசிக்க
ஆயிரம் இருப்பினும்,
என்னை ரசித்த
உன்னையே நினைக்கிறேன்
என் பயணத்தில்...

அன்று உன்னைப் பார்த்தது,
அன்று உன்னுடன் பேசியது,
அன்று உன்னில் புதைந்தது,
என்று "அன்றையே"
நினைக்கச் செய்கிறாய்...

தனிமை துயரைப்
போக்குவதாய் எண்ணி,
என்னை தவிக்க விடுகிறாய்...
தடுமாற செய்கிறாய்...

விபரீத விளைவுகள
அறிந்தும் விரும்பியே
உன்னை நினைக்கிறேன்...

என் அனைத்துப் பயணங்களிலும்
உன்னுடனே பயணிக்கிறேன்
"தனியாக..."


- இவள்
மா.ஐஸ்வர்யா,
நோயாளிகளின் ஆலோசகர்,
கண் நீர் அழுத்தப் பிரிவு,
அரவிந்த் கண் மருத்துவமனை,
மதுரை - 20

Friday, July 9, 2010

உன் நினைவில்

என் மனதை,
உன் நினைவுகளால்
நிரப்பியுள்ளேன்...

என் இதயம்,
உன்னை நினைப்பதாலேயே
துடிக்கிறது...

நாளும் உன் நினைவில்
நீளும் என் ஆயுள்...

Tuesday, June 29, 2010

என் உலகம்

உலகிற்கு,
நீ யாரோ...!
எனக்கு,
நீயே உலகு...!

Tuesday, June 15, 2010

அன்பு

அன்பு என்பது
கரும்பலகை அல்ல,
எழுதி எழுதி அழிப்பதற்கு...
அது,
கல்வெட்டு போன்றது
என்றும் நிலைத்திருக்கும்...
மண்ணோடு புதையும் வரை
நெஞ்சோடு வைத்திருப்பேன்
உன் நினைவுகளை...

Tuesday, June 1, 2010

ஒன்றே

இரவு பகல் இரண்டானாலும்
நாள் என்பது ஒன்றே...
கண்கள் இரண்டானாலும்
பார்வை என்பது ஒன்றே...
சிறகுகள் இரண்டானாலும்
பறப்பது என்பது ஒன்றே...
இதயம் இரண்டானாலும் - நம்
அன்பு என்பது ஒன்றே...

எளிது

இறப்பது எளிதே
எனக்கு...
உன்னை
மறப்பதைக் காட்டிலும்...

Friday, May 28, 2010

உயிர்ச் சித்திரம்

அடி, முடி தேடினாலும்,
அகராதியை புரட்டினாலும்,
முழுமையான அர்த்தம்
அறிய முடியாத உயிர்ச் சித்திரம்.
நம் நட்பு தோழா...

Thursday, May 20, 2010

சட்டி பானை காதல் கதை / கவிதை

காலம் என்னும் படுகையிலே,
களிமண் திட்டாய் நாம் கிடந்தோம்...

ஞாலகுயவன் நமை எடுத்து வனைந்தான்.
இரு வகை பாத்திரமாய்...

சட்டி என்று எனை சொன்னார்,
பானை என்பது உன் பெயராம்...

என்னில் கொதித்த உலை நீரை,
உன்னில் வடித்தல் என் நியதி...

என்னில் சமைத்த சோற்றோடு,
இனிதாய் இணையும் உன் குழம்பு...

அடுக்கி வைத்த அடுக்களையில்,
முடுக்கி வைத்த காதலுடன்...

எதனை தத்துவம் பேசுகிறோம்
எனினும் மனிதர் புரிவதில்லை...

கழுவி வைக்கும் வேளையிலே,
தழுவி கொள்வோம் தற்செயலாய்...

இணைந்த ஜென்ம பயணத்தில்,
இதயம் அழுத்தும் ஓர் கவலை...

வனைந்த பாண்டம் அத்தனையும்,
உடைந்தே தீரும் உலக விதி...

ஒன்றை இருவரும் உடைவோமா...!
மீண்டும் படுகை அடைவோமா...!

------ நாளேடு ஒன்றில் படித்தது...