Monday, November 30, 2009

என் இதயம்

என்னைப் பார்த்து கேட்கிறார்கள்
"இதயத்தில் இருக்கும் உன் நண்பன் யார்?"
என்று ...
பாவம், அவர்களுக்கு தெரியாது,
"என் நண்பன் தான் என் இதயம்"
என்று...

Saturday, November 28, 2009

நூறுமுறை இறப்பேன்

நொடிக்கு நூறுமுறை இறப்பேன்
என் மரணம் உன் மடியில் என்றால்...
இறந்த மறு நொடியே மீண்டும் பிறப்பேன்
உன் நட்பு கிடைக்கும் என்றால்...

என்றாவது ஒரு நாள்

அன்பின் ஆழச் சுவடுகளை
அதிகம் பதித்தவன் நீதான்.
என்னை காணத்துடிக்கும்
உன் கண்களுக்கு சொல்லி வை
என்றாவது ஒரு நாள்
என் உறவை காண்பாய் என்று...
அது வரை வானத்தில் தெரியும்
வானவில்லை பார்த்து ரசி...

எக்கரையில்

நீயோ அக்கரையில்
நானோ இக்கரையில்
நாம் கொண்ட
நட்பு எக்கரையில்....?

Thursday, November 26, 2009

சிறை

சிறைப்பட்டுப் போனேன்
ஆம், உண்மை தான்
சிறையில் அல்ல,
உன் ஷ்நேகிததில்...

என்றும் ஓய்வதில்லை

கடல் அலைகளும்
ஒருநாள் ஓயலாம்...
ஆனால்,
உன் நினைவலைகள்
என்றும் ஓய்வதில்லை
என் மனதில்...

Wednesday, November 25, 2009

நம் இதயங்கள்

வார்த்தைகள்
ஊமையாகிப் போகின்றன...
நம் இதயங்கள்
பேசிக் கொள்வதால்...

Tuesday, November 24, 2009

காதல் கொண்டேன்

முதலில் நட்பு கொண்டேன்
பிறகு காதல் கொண்டேன்
ஆம்,
நட்பு கொண்டது உன் மீது...
காதல் கொண்டது உன் நட்பு மீது...

காதலித்துப் பார்

கண்ணீர் மட்டுமல்ல
உன் கனவுகளும்
உன்னைக் காயப்படுத்தும்
காதலித்துப் பார்...

காதல்

காதல்,
சிலருக்கு வரமாய்
சிலிர்க்கிறார்கள்...
சிலருக்கு வலையாய்
சிக்கிக்கொள்கிறார்கள்...

ரசிதுவிடு

காலங்களைக்
கடந்து செல்லும்போதே
வாழ்கையை ரசிதுவிடு...
இல்லையேல்,
காலம் இருக்கும்
வாழ்க்கை இருக்காது...

Monday, November 23, 2009

பௌர்ணமி

தேயவில்லை...
முழுமதியாய்
உன் நினைவுகள்
இருப்பதால்,
என் மன வானில்
என்றும் பௌர்ணமியே...

விசித்திரம்

உன்னைப்போலவே
உன் நினைவுகளும்
விசித்திரமானவை தான்...
உன்னிடம்,
என்றோ சிரித்ததை நினைத்தால்
இன்று அழுகை வருகிறது...
என்றோ அழுததை நினைத்தால்
இன்று சிரிப்பு வருகிறது...

என்னைப்போல் ஒருவன்

யாரைப் பார்த்தாலும்
உன்னை போலவே
தெரிகிறது...
ஆனால்,
உன்னைப் பார்த்தல் மட்டும்
என்னைப் போல
தோன்றுகிறது...

பிடிக்கவில்லை...


இந்த உலகில்
பிடித்தவர்கள் அனைவரையும்
பிடிக்காமல் போய்விட்டது
காரணம்
உன்னை அதிகமாக
பிடித்திருப்பதால்...

Saturday, November 21, 2009

என் அன்பு

ஆண்டவனை போலதான்
உன்மீதான என் அன்பும்
காண முடியாது...
உணரலாம்...

உயிரே

என் உடலை திறந்தால்
உயிர் இருக்கும்...
அந்த உயிரை திறந்தால்
அதில் நீ இருப்பாய்...

Friday, November 20, 2009

நீயும் நானும்

நீயும் நானும்
வானமும் பூமியுமாய்
என்றாவது ஒரு நாள்
தொட்டுக்கொள்வோம் என்று
இன்னும் பார்த்து கொண்டே
இருக்கிறோம்...

உன்னை காணாமல்

கண்கள் அசையவில்லை,
உதடுகள் பேசவில்லை,
இதயம் மட்டும்
வலியால் துடிக்கிறது
உன்னை காணாமல்...

Thursday, November 19, 2009

இதயமே

உன்னை,
இதயத்தில் தேடினேன்...
இதயமே நீ தான்
என்பது அறியாமல்...

என் தோள்கள்

நான் தோள்கள்
வாங்கியதே
என் தோழன் நீ
தோள் சாயதானே!!!!

Wednesday, November 18, 2009

கண்ணாடி

என் முகம் காட்ட இருக்கலாம்
ஆயிரம் கண்ணாடிகள்!!!
என் அகம் காட்டும் கண்ணாடி
என்னவள் மட்டுந்தானே!!!

Tuesday, November 17, 2009

தனிமை

தனிமையில் பேசிக்கொண்டிருக்கும்
என்னை பலரும் 'பைத்தியம்'
என சொல்கிறார்கள்...
அவர்களுக்கு எப்படித் தெரியும்?
நான் பேசிக்கொண்டிருப்பது
உன் நினைவுகளுடன்தான் என்பது...

படைப்பு

நிலவு படைக்கப்பட்டது
இரவுக்காக...
உறவுகள் படைக்கப்பட்டது
அன்பிற்காக...
நீ படைக்கப்பட்டது
என்றும் எனக்காக...

Monday, November 16, 2009

வலிக்கிறது

தென்றல் மோதி
பூக்களுக்கு வலிப்பதில்லை...
ஆனால்,
உன் நினைவுகள் மோதி
என் உள்ளம் வலிக்கிறது
சுமையாக அல்ல
சுகமாக...

நீ

காற்றாய் வந்தாய் !
தென்றலாய் பழகினாய் !!
சுவாசமாய் நிற்கிறாய் !!!

Thursday, November 12, 2009

ஒன்றும் இல்லை

கொடுப்பதற்கு பெரிதாக
ஒன்றும் இல்லை
என் உயிரை தவிர...
இழப்பதற்கு பெரிதாக
ஒன்றும் இல்லை
உன் அன்பை தவிர....

தொலைந்த மனம்

எங்கேயோ தொலைந்த மனம்
என்னிடமே வந்து சேர்க்கிறது
நீ என்னோடு பேசுகையில்...

யாரும் இல்லை

உன்னை வெல்வதற்கு
யாரும் இல்லை
என் அன்பை தவிர...
என்னை கொல்வதற்கு
யாரும் இல்லை
உன் பிரிவை தவிர....

நான்

தோழா..
நான் உனக்காக
வாழ்பவள் அல்ல...
உன்னால் வாழ்பவள்...

Wednesday, November 11, 2009

ஒரேழுது கவிதை

ஒரு எழுத்தில்
அன்பு, நட்பு பற்றி
கவிதை எழுத சொன்னாய்
நீ சொல்லி முடிக்கும் முன்னே
நான் எழுதி முடித்தேன்
"நீ"

Monday, November 9, 2009

என் மரணம்

உன் அன்பு மட்டுமே
என் நேசிப்பு ...
உன் வார்த்தை மட்டுமே
என் கவிதை ...
உன் பார்வை மட்டுமே
என் வெட்கம் ...
உன் ஸ்பரிசம் மட்டுமே
என் உணர்வு ...
உன் சுவாசம் மட்டுமே
என் மூச்சு...
உன் இதயம் மட்டுமே
என் இருப்பிடம்...
உன் கோபம் மட்டுமே
என் கண்ணீர்...
உன் வேதனை மட்டுமே
என் வலிகள்...
நீ மட்டுமே நான் ...
உன் பிரிவு மட்டுமே

என் மரணம்...

Sunday, November 8, 2009

யாதுமாகினாய்...

சுடும் என் சுவாசத்தை கேள்
அது சுகமாய் ஜனிப்பது
உன்பெயர் தான்...
சுற்றும் என் விழிகளை பார்
அதில் சுடராய் தெரிவதும்
உன்முகம் தான்....
உயிரில் ஒலிக்கும்
என் மொழி கேள்
அதில் மறந்தும் ஒலிப்பது
உன்குரல் தான்...

Friday, November 6, 2009

ஒவ்வொரு நிமிடமும்

என்னுள் கரைந்த நீ ,
உன்னுள் தொலைந்த என்னை ,
நினைக்கும் ஒவ்வொரு நிமிடமும் ,
என் மனமும் உன்னை நேசிக்கும் ,
நினைக்காத நிமிடமும்
உன் அன்பை சுவாசிக்கும் ..

சிறகுகள்

நான்
பறப்பதற்கு
சிறகுகள்
தேவையில்லை...
நீயும்
உன் அன்பும்
போதுமே...

ஒரு தாய்

இரு வேறு கருவில்
உருவானபோதும் ,
நட்பெனும்
ஒரு தாய்க்கு
பிள்ளைகள் ஆனோம்...

வேண்டும்

மரணமே வந்தாலும்
உன்னை மறக்காத
இதயம் வேண்டும் ...
இன்னும்
ஒரு ஜென்மம் என்றால்
நீயே வேண்டும்
என்னுயிர் தோழனாய்...