Monday, February 15, 2010

என்ன செய்தாய்

கண்ணீர் சிந்தும் நண்பனை
கண்களில் வைக்கவேண்டும்...
கண்ணீர் சிந்தவிடாமல் காப்பவனை
இதயத்தில் வைக்கவேண்டும்...

அப்படியென்றால்,
நீ என்ன செய்தாய்...?
உன்னை என் உயிரினில் வைத்தேன்...

மனம் வாடும்

செடியை விட்டுப் பிரிந்தால்,
மலர் வாடும்...
உன் நினைவை விட்டுப் பிரிந்தால்,
என் மனம் வாடும்...

Thursday, February 11, 2010

அதிகரிக்கிறது

அதிகரித்துக் கொண்டிருப்பது
உன்னுடன் பேசாத
நாட்கள் மட்டுமல்ல...
உன் மீதான
என் அன்பும்தான்...

Wednesday, February 10, 2010

பொறாமை

உன்னை எப்போதும்
நினைதுக்கொண்டிருப்பது நான்...
ஆனால், நீ இருப்பதோ
அவனிடத்தில்...?

இதயத்தின் மீது
மூளைக்கு பொறாமை...

Monday, February 8, 2010

வரமும் தவமும்

நான் வரம் பெற,
நீ செய்த தவம்
என்மீதான உன் அன்பு...

Saturday, February 6, 2010

தொலைத்துவிடுகிறேன்

எவ்வளவோ பத்திரமாக
வைத்திருந்தாலும்,
தொலைத்துவிடுகிறேன்
என்னை
உன் நினைவுகளில்...