Tuesday, December 28, 2010

உன் கோவமும் அன்பும்

உன் கோவம்
உன்னை நேசிப்பவர்களை
யோசிக்க வைக்கும்...
ஆனால்,
உன் அன்பு,
உன்னை வெறுப்பவர்களையும்
நேசிக்க வைக்கும்...

உணர்ந்தேன்

பிறப்பை
நான் பிறந்து
உணர்ந்தேன்...
இறப்பை
நான் இறக்காமல்
உணர்ந்தேன்...

நீ இல்லாத நேரங்களில்...

Sunday, December 26, 2010

உறக்கத்தில்

உறக்கத்தில்
உன் சத்தம் கேட்டு
எழுந்து விட்டேன்...
ஆனால்,
நீ இல்லை...
பின்பு தான்
தெரிந்தது,
அது,
என் இதயத்தில்
துடித்துக்கொண்டிருக்கும்
உன் நினைவுகள்
என்று...

நான்

உன்னை,
உறக்கத்தில் நினைப்பவள்
அல்ல நான்,
உறங்காமல் நினைப்பவள்
என்றும்...

Saturday, December 25, 2010

பிறக்கிறாய்

என்னை விட்டு
பிரிந்தும்,
தினம் தினம்
பிறந்துகொண்டே
இருக்கிறாய்

நினைவுகளால்...

Tuesday, December 21, 2010

நாட்கள் இல்லை

வின்னில நிலவு
இல்லாத நாட்களும் உண்டு...
மண்ணில் மழை
இல்லாத நாட்களும் உண்டு...


ஆனால்,
என்னில் உன் நினைவு
இல்லாத நாட்கள் இல்லை...

Saturday, December 18, 2010

என்னை மறந்துவிடாதே

பூத்த மலரை கிள்ளிவிடாதே...
கிள்ளிய மலரை சூடிவிடாதே...
சூடிய மலரை வாடவிடாதே...
வாடிய மலரை எறிந்துவிடாதே...
எறிந்த மலரைப் போல்
என்னை மறந்துவிடாதே....

Tuesday, December 14, 2010

உன் நினைவுகள்


உன் நினைவுகளில்
உயிர் இல்லை
ஆனால்,
நான் உயிர் வாழ
காரணம்
உன் நினைவுகள் தான்...