Monday, August 31, 2009

நினைவுகள்

நாட்கள் நம்மை
கடந்து சென்றாலும்,
நட்பின் நினைவுகள்
நம்மை விட்டு
பிரிந்து செல்வதில்லை...

உணரும் வரை...

உணரும் வரை
உண்மையும் ஒரு பொய் தான்.
புரிகின்ற வரை
வழியும் ஒரு புதிர் தான்.

Saturday, August 29, 2009

சிறந்தது

உலகினில் சிறந்தது உயிர்கள்...
உயிர்களில் சிறந்தது மனிதன்...
மனிதர்களில் சிறந்தது பெண்கள்...

பெண்களில் சிறந்தது நீ...
உன்னுள் சிறந்தது ???
உன்னுடையது எனப்படும்
அனைத்துமே சிறந்தது தானே...

Thursday, August 27, 2009

என்றும் நான் உண்டு...

உன் அன்பை சுமக்க
இதயம் உண்டு...
உன்னை பார்க்க
கண்கள் உண்டு...
உன் பேசை கேட்க
செவி உண்டு...
உன்னையே நினைத்துக்கொண்டிருக்க
என்றும் நான் உண்டு...

துணையாக..

நிழல் கூட
வெளிச்சம் உள்ளவரைதான்
துணைக்கு வரும்...
ஆனால்,
என்னுடைய அன்பு
உயிர் உள்ளவரை
துணையாய் வரும்....
உன்னோடு....

Saturday, August 22, 2009

உன் நட்புடன் வாழ..

உயிருடன்
வாழ
ஒரு பிறவி
போதும்...
உன் நட்புடன்
வாழ

பல ஜென்மங்கள்
வேண்டும்...

Wednesday, August 19, 2009

உண்மை...

நீ என்னருகினில் இல்லை
என்பது எவ்வளவு உண்மையோ...
அவ்வளவு உண்மை
நீ எனக்குள் இருக்கிறாய் என்பதும்...

Wednesday, August 12, 2009

தேவதையின் குணங்கள்

உன் கண்களில்
வெளிச்சம் இருக்கும்தானே...
உன்னை பார்த்ததும்
கவிதைகள் பிறக்கும்தானே...
உனக்குள்ளும் இத்தனை
நட்பு இருக்கும்தானே...
நிச்சயம் இருக்கும்...
இவை தேவதைகளுக்கான குணங்கள்...
உனையன்றி யார் பெற்றிருப்பார்???...

உன் பெயர்..

எத்தனையோ முறை
தவற விட்ட புன்னகையை..
இன்று மொத்தமாய் உதிர்க்கிறேன்...
உன் பெயரை காணும் வழியெங்கும்..!!!

மறந்துவிட்டேன்

உன்னை மறக்க நினைத்திருந்தேன்..
ஆனால்,
தொடரும் உன் நினைவுகளால்
அந்த நினைப்பையே
நான் மறந்துவிட்டேன்...!!

Monday, August 10, 2009

புரிந்து கொள்க...

நம்மை புரிந்து கொள்ளாத எதுவும்
நம்மை நினைப்பதில்லை...
நம்மை புரிந்து கொண்ட எதுவும்
நம்மை விட்டு விலகுவதில்லை...

வெற்றிப் பயணம்

உன் இதயத்தை மட்டுமே
இலக்காக நினைத்து கொண்டு,
இவ்வுலக முடிவுவரை
நான் மேற்கொள்ள விரும்பும்
வெற்றிப் பயணம்...
நம் நட்பு!!!!!

Saturday, August 8, 2009

உயிர் உள்ளவரை

ஜீவன் உள்ளவரை மனிதன்..
பணம் உள்ளவரை மரியாதை..
நேசம் உள்ளவரை பாசம்..
என் உயிர் உள்ளவரை நம் நட்பு ....

Thursday, August 6, 2009

கவலை

நேரம் போவதுகூட தெரியாமல்
உன்னோடு பேசி கொண்டிருக்கையில்,
ஒரே ஒரு கவலை எனக்கு
இந்த நேரம் ஏன் போகிறது என்று...!

முடிவு

மழையின் முடிவு மண்ணில்..
நதியின் முடிவு கடலில்..
காற்றின் முடிவு...?
அதுவே நம் நட்பின் முடிவு....

நட்பால்

ஆண்பால்,
பெண்பால்,
இரண்டும்
பொதுவானது
நட்பால்....

Wednesday, August 5, 2009

பிரிவு இல்லை

மலர்ந்த பூவில் வண்டு இல்லை
பரந்த கடலில் அலை இல்லை
திறந்த வானில் கதவு இல்லை
சிறந்த நட்பில் பிரிவு இல்லை....

காதலும் நட்பும்

இதயம் கொடுத்து,
உயிரை பறிப்பது
காதல்....
உயிரை கொடுத்து,
இதயங்களை பெறுவது
நட்பு....

தாய்மையின் விதை

தாய்பாலுக்கான விதை
காதலில் இருக்கிறது...
தாய்மைக்கான விதை
நட்பில் இருக்கிறது...

Tuesday, August 4, 2009

விவாதம் செய்யாதே

நீ
யாரிடமும் விவாதம்
செய்யாதே...
அதில்
தோற்றால்,
ஒரு நம்பிக்கையை
இழப்பாய்...
வெற்றி பெற்றால்,
ஒரு எதிரியை
பெறுவாய்....

Monday, August 3, 2009

அருகில் இருப்பாயா???

அருகில் இருப்பவர்கள்
எல்லாரும் அன்பானவர்கள் இல்லை...

அன்பானவர்கள் எல்லாரும்
அருகில் இருப்பதும் இல்லை...
உன்னைப் போல...

பிரிவதில்லை

பார்த்த முகங்கள்
கண்ணை விட்டு
பிரியலாம்...
ஆனால்,
பழகிய இதயங்கள்
நெஞ்சை விட்டு
பிரிவதில்லை...

Saturday, August 1, 2009

உன் இருப்பிடம்

உன் பிறப்பிடம்
வேறு என்றாலும்...
எப்போதுமே,
உன் இருப்பிடம்
என் இதயம் தான்...

காயப்படுத்தாதே

இதயத்தைக்
காயப்படுத்தாதே...
அதில் இருப்பது
நீ தான் என்று
உனக்கு தெரியாதா?...

ஓர் ஒற்றுமை

உன் கண்களுக்கும்,
உன் பேனாவிற்கும்,
ஓர் ஒற்றுமை
இரண்டுமே
குத்திக் கிழிப்பது
என் இதயத்தை அல்லவா...

ஞாபகங்கள்

அன்று
நீ தந்து விட்டு போன
உன் ஞாபகங்கள்...
இன்றும்
என் நெஞ்சில்
மறையாத சுவடுகளாய்...