Wednesday, September 30, 2009

சாய்ந்து விட்டு போ

உன் வீட்டு வாசலில்
உள்ள மரம் நான்.
தினமும் ஒரு முறையாவது
என் மீது சாய்ந்து விட்டு போ.
என் அன்பு உன் மீது
பூக்களாக மலரும்...

இதயத்துடிப்பாய்...

எவ்ளவோ பேசினோம்
இரவு பகலென்று பாராமல்,
இருந்தும் மறக்க முடியவில்லை
நீ என் மேல் காட்டும் அன்பு
நீ பேசும் அன்பான வார்த்தைகள்
இன்னும் ஒலித்து கொண்டே உள்ளது
என் இதயத்துடிப்பை போல.

கடவுளுக்கு நன்றி

உன் நட்பின் ஒளியால்
என் உள்ளம் பிரகாசிக்க...
என் சோகங்கள் சிதறின...
என் கனவு கவிதை ஆயின...
வெண்மதியை தூது அனுப்பி
கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்
உன்னை எனக்கு தந்தமைக்கு...

உனதுயிர் ஆனேன்

பண்பை காட்டினாய்
நேர்மை ஆனேன்...
அறிவை காட்டினாய்
விவேகம் ஆனேன்...
அன்பை காட்டினாய்
தாகம் ஆனேன்...
உறவை காட்டினாய்
உனதுயிர் ஆனேன்...

என்ன தந்தாய்....

நட்பை தந்தாய் வாழ்வு இனித்திட...
கவிதை தந்தாய் உறவு வளர்த்திட...
பாடல் தந்தாய் மனம் குளிர்திட....
இ-மெயில் தந்தாய் என் நாளை உயிர்த்திட...

உன் பெயரை சொல்வேன்

உலகத்தில் அழகான கவிதை
எது என்று கேட்டால்
உன் நட்பு என்பேன்...
நட்பை கேட்டால்
என் உயிர் என்பேன்...
உயிரின் பெயரை கேட்டால்
உன் பெயரை சொல்வேன்....

Tuesday, September 15, 2009

நீ என்னுடன் இல்லை

இசையை கவிதையை ரசிக்கின்றபோது
சுவாசமாக நேசிக்க
நீ என்னுடன் இல்லை !
பார்த்ததை படித்ததை பற்றி பேசவிரும்பும்போது

கருத்து பறிமாற்றத்திற்கு
நீ என்னுடன் இல்லை !
மனதின் ஆர்வம் குறைகின்றபோது

உற்சாகத்திற்கு உயிர்கொடுக்க
நீ என்னுடன் இல்லை !
ஆனால்,

நான் நினைக்கும்போது இதயத்தில்
உணர்வுகளில் என் உயிரினில்
நீ கலந்து இருக்கிறாய் !!!

நான் மட்டும்

உன் நட்புக்காக இதயத்தில்
இடம் கொடுக்க பலர் உன்டு...
உன் நட்புக்காக இதயத்தையே

கொடுக்க நான் மட்டும் உன்டு...

நேசி

அழகை நேசிக்காதே
அறிவை நேசி !
பணத்தை நேசிக்காதே

பாசத்தை நேசி !
ஆடம்பரத்தை நேசிக்காதே

அடக்கத்தை நேசி !
ஆணவத்தை நேசிக்காதே

அன்பை நேசி !
ஏனெனில்,
ஆணவம் அழிவுப்பாதையை

விரைவில் நோக்கி செல்லும் !!!

நட்பு வாடினால்

மரம் வாடினால்
தண்ணீரை விடுவேன் !
மனம் வாடினால்

கண்ணீரை விடுவேன் !
நம் நட்பு வாடினால்,

என் உயிரை விடுவேன் !!!

Thursday, September 10, 2009

என்றும் அழகு

செடியில் பூக்கும்
பூவை விட,
ஒரு நொடியில் பூக்கும்
உன் புன்னைகை
என்றும் அழகுதான்
எனக்கு...

இதய துடிப்பு

இடி இடிப்பது
மழைக்காக...
என் இதயம் துடிப்பது
உனக்காக...

வாங்கித் தருகிறேன்

என்ன வேண்டும் கேள்.
வாங்கித் தருகிறேன்
என்னை விற்றாவது...

Monday, September 7, 2009

மனமில்லை

விக்கல் வரும்போது,
தண்ணீர் குடிக்க
மனமில்லை..
நினைப்பது
நீ என்பதால்
நீடிக்கட்டும்
சில நிமிடங்கள்
என்று..

Saturday, September 5, 2009

சூரியகாந்தி பூ

சூரியனை பிரிந்து
உறங்காமல்
தேய்ந்து கொண்டிருக்கும்
நிலவு போல இருந்த
நான்
இன்று,
ஏனோ உணர்கிறேன்,
உன் அன்பை
சூரியனை பார்த்த
சூரியகாந்தி பூ போல....

நேரம்

துடிப்பதை விட.......
உன்னை நினைப்பதற்கே
நேரம் சரியாக இருக்கிறது
என் இதயத்துக்கு....

விடுமுறை

நிலவுக்கும்
ஒரு நாள் விடுமுறை
வானத்தில்....
ஆனால்,
உன் நினைவுக்கு
என்றும் விடுமுறை
இல்லை என் மனதில்...