Thursday, December 31, 2009
உன்னை மறந்தால்
நாட்கள் இருக்கலாம்...
உன்னை மறந்தால்
ஒரு நிமிடம்கூட கடக்காது
என் உயிர்...
Tuesday, December 29, 2009
பிரிவில்லை
இதோ வருகிறேன்,
உன் விழியில் உறக்கமாக...!
இரவிலும் பிரிவில்லை
நம் நட்பிற்கு...!
அன்பின் அடையாளம்
என்பதைவிட ,
இனி, எப்போது சந்திப்போம்
என்றும் இதயம் தேடுகிறதே
அதுவே,
நம் அன்பின் அடையாளம்...
நான் கண்டவை
புரியாத கவிதை,
அறியாத பொருள்,
கலையாத கனவு,
இன்னும் எவ்வளவோ உள்ளன
நான் கண்டவை உன் நட்பில்...
Monday, December 28, 2009
Saturday, December 26, 2009
சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்
உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங்
இல்லாமலா
உன்னை எனக்காகவும்,
என்னை உனக்காகவும்
ஈன்றடுத்தார்கள் நம் பெற்றோர்கள்...
சொல்?
உனக்கே பொருத்தமான
உயரத்துடன் என் வளர்ச்சி
நிற்குமா என்ன?
காதருகே ஒலிக்கும்
பாடலின் இசையை
உணர முடியாத நான்,
காற்றில் கலந்து வரும்
உன் சுவாசத்தை
எவ்வாறு உணர்ந்தேன்...!
என்னுடைய தலைசிறந்த ஆசான் நீ !
ஆம்! உலகத்தை ரசிக்கவும்,
கூடவே உன்னை ரசிக்கவும்
கற்று கொடுத்தாய் அல்லவா...!
நினைவில் நிற்க
மறுக்கிறது பாடங்கள்
காரணம்,
என் நினைவை முழுவதும்
அடைத்து கொண்டல்லவா
அமர்ந்திருக்கிறாய் நீ...!
எனக்கும் மேஜிக் தெரியும்.
என் கண் மூடி திறக்கும்
ஓவ்வொரு நொடியும்
உன்னை, என் கண் முன்னே
தோன்றி மறைக்கிறேனே...!
சிந்தனையில் நின்று
சில சமயம் சிந்திக்கவும் வைக்கிறாய்,
பல சமயம் சிறையும் வைக்கிறாய்...!
விழி பரிமாற்றம்,
மொழி இல்லா சம்பாசனைகள,
தொடுதலில்லா தீண்டல்கள்,
இவை எதுவுமின்றி
உன் மௌனமே
எனக்கும் உனக்குமான
உறவினை உணர்த்தியது...!
ஆம்,
சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்...!
Friday, December 25, 2009
சிற்பம்
சிற்பமாக செதுக்கியுள்ளேன்
என் மனதில்...
உளி கொண்டு அல்ல,
என் உயிர் கொண்டு...
நேசிப்பேன்
புயல் அடிக்கும் வரை...
பூவை நேசிப்பேன்
வாடி விழும் வரை...
நிலவை நேசிப்பேன்
விடியல் தொடங்கும் வரை...
உன்னை நேசிப்பேன்
என் உயிர் உள்ள வரை...
இயல்பு
புரிந்து கொள்ளாததால்
வெறுக்கிறோம்...
சிலரை, நாம்
வெறுப்பதால் புரிந்து கொள்ள
மறுக்கிறோம்...
Thursday, December 24, 2009
ஓர் உயிர் போதும்
ஆயிரம் உறவுகள்
இருந்தாலும்,
உள்ளதைப் புரிந்து கொள்ள
உன் ஓர் உயிர் போதும்...
Wednesday, December 23, 2009
ஆழ்கடல்
ஆழ்கடல் போன்றது...
கரையில் தேடினால்,
சிப்பிகள் தான் கிடைக்கும்...
மூழ்கி தேடினால் தான்
முத்துக்கள் கிடைக்கும்
உன்னைப் போல...
Tuesday, December 22, 2009
அன்பு மலர்கள்
உன் நினைவுகளை
மலர்க் கொடியாய்
மலரவிட்டேன்...
இப்போது
பூத்துக்கிடக்கின்றன
என்னுள்
அன்பு மலர்கள்
நீ பறித்துச் சூட...
Friday, December 18, 2009
நம்மைப் போல
நல்ல மனது வேண்டும்
என்னைப் போல...
நல்ல மனதைப் புரிந்து கொள்ள
நல்ல நட்பு வேண்டும்
உன்னைப் போல...
ஆசைப் படுகிறேன்
உன்னைப் பார்க்க
ஆசைப் பட்டேன்...
ஆனால்,
இப்போதெல்லாம்
கண் சிமிட்டும் நேரமாவது
உன்னைப் பார்க்க
ஆசைப் படுகிறேன்...
எது வரை...
சிரிக்கும் வரை கண்ணீர்
உதிரும் வரை பூக்கள்
மறையும் வரை நிலவு
மரணம் வரை உன் நட்பு...
Wednesday, December 16, 2009
நாய் குட்டி
நான், உனக்கு எதிர் திசையில் நடந்தாலும்,
என் மனம் உன் பின்னாலேயே போகிறதே...
உன் வீட்டு நாய் குட்டியைப் போல...
Tuesday, December 15, 2009
கவிதைகள்
கவிதையாகின்றன...
என் எழுதுகோலில்
மையாவதால் அல்ல...
உன்னைப் பற்றி எழுதுவதால்...
நீயும் என் இதயம் தான்
என்னை, நீ பார்க்கவும் இல்லை
ஆனால்,
எனக்காக துடிப்பதால்
நீயும் என் இதயமாகிறாய்...
Monday, December 14, 2009
Friday, December 11, 2009
நான் இருப்பேன்
நான் உன் பின்னால் இருப்பேன்
உன் சிரிப்பை ரசிக்க...
நீ அழும் ஒவ்வொரு வினாடியும்
நான் உன் முன்னால் இருப்பேன்
உன் கண்ணீரை துடைக்க...
Wednesday, December 9, 2009
ஆயுட்காலம்
மனிதனின் ஆயுட்காலம்
சுமார் 60 ஆண்டுகள்...
விபரம் அறியாமலேயே
கழியும் 15 ஆண்டுகள் ...
விபரீத எண்ணங்கள்
தோன்றும் 10 ஆண்டுகள் ...
தான் குடும்பம் என்ற எண்ணம் தோன்றி
முறையே கழியும் 30 ஆண்டுகள் ...
"ரிடையர்மென்ட்" வாங்கும் வயதில் தான்
"ரிவைன்ட்" ஆகும் உன் வாழ்க்கை...
இழந்த இனிமைகள் வெளிவரும்
இமைக்காத கண்ணிலிருந்து
கண்ணீராய்...!
Tuesday, December 8, 2009
பிரிவு & நினைவு
யாராலும் மறக்க முடியாத
வலி...
நினைவு என்பது
யாராலும் திருட முடியாத
பரிசு...
உன்னுடைய பரிசுகளில
என்னுடைய வலிகள்
தொலைந்து போயின...
Monday, December 7, 2009
உன் பார்வை
விடியும் வரைக் காத்திருந்தேன்
சூரியனைக் கண்ட மலர்போல
மலர்கிறேன்
உன்னைப் பார்த்ததும்...
Saturday, December 5, 2009
என்னருகில்
பிரிந்து இருந்து
பிரியம் காட்ட வேண்டாம்...
அருகில் இருந்து
சண்டை போடு தோழா...
அது போதும் எனக்கு...
உன் பிரிவால்
உயிரெழுத்துகள் இல்லாமல்
மெய் எழுத்துகளால் மட்டும்
உருவாகுமோ செந்தமிழ்...
தோழா,
உயிரெழுத்து இல்லா
தமிழானேன்
உன் பிரிவால்...
Friday, December 4, 2009
Thursday, December 3, 2009
வாழ்க்கைப் புத்தகம்
தோழா,
என் வாழ்க்கைப் புத்தகத்தைப்
புரட்டிப் பார்...
அதில், உனக்கு
சாமரம் வீசாத
வார்த்தைகள்
ஒன்றும் இருக்காது...
Wednesday, December 2, 2009
Tuesday, December 1, 2009
மீண்டும் பிறந்தால்
செருப்பாக பிறக்க
ஆசைப்படுகிறேன்...
உன்காலில் மிதிபடுவதக்காக அல்ல...
உன்னைச் சுமப்பதற்காக...