Thursday, December 31, 2009

பரிசு

உன்னைத் தெரியாதவர்களுக்கு
நினைவுப் பரிசு...
உன்னைத் புரிந்த எனக்கு
உன் நினைவே பரிசு...

குறிஞ்சி மலர்

பன்னிரண்டு ஆண்டுக்கு
ஒருமுறை அல்ல...
தினம் தினம் பூக்கும்
குறிஞ்சி பூ
நம் நட்பு...

அன்பு மழை

தூரலும் இல்லை
சாரலும் இல்லை
நான் மட்டும் நனைகிறேன்
உன் அன்பில்...

உன்னை மறந்தால்

உன்னை பிரிந்தால்
நாட்கள் இருக்கலாம்...
உன்னை மறந்தால்
ஒரு நிமிடம்கூட கடக்காது
என் உயிர்...

Tuesday, December 29, 2009

பிரிவில்லை

ஏன் வரமாட்டேன்?
இதோ வருகிறேன்,
உன் விழியில் உறக்கமாக...!
இரவிலும் பிரிவில்லை
நம் நட்பிற்கு...!

அன்பின் அடையாளம்

எத்தனை நாட்கள் சந்தித்தோம்
என்பதைவிட ,
இனி, எப்போது சந்திப்போம்
என்றும் இதயம் தேடுகிறதே
அதுவே,
நம் அன்பின் அடையாளம்...

நான் கண்டவை

தெரியாத காற்று,
புரியாத கவிதை,
அறியாத பொருள்,
கலையாத கனவு,
இன்னும் எவ்வளவோ உள்ளன
நான் கண்டவை உன் நட்பில்...

Monday, December 28, 2009

நான்

விழுந்தவுடன் மறைந்து விட
நான் மழைத் துளி அல்ல...
இறுதிவரை உன்னுடன்
இருக்கும் கண்ணீர் துளி...

Saturday, December 26, 2009

சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்

உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங்
இல்லாமலா
உன்னை எனக்காகவும்,
என்னை உனக்காகவும்
ஈன்றடுத்தார்கள் நம் பெற்றோர்கள்...
சொல்?

உனக்கே பொருத்தமான
உயரத்துடன் என் வளர்ச்சி
நிற்குமா என்ன?

காதருகே ஒலிக்கும்
பாடலின் இசையை
உணர முடியாத நான்,
காற்றில் கலந்து வரும்
உன் சுவாசத்தை
எவ்வாறு உணர்ந்தேன்...!

என்னுடைய தலைசிறந்த ஆசான் நீ !
ஆம்! உலகத்தை ரசிக்கவும்,
கூடவே உன்னை ரசிக்கவும்
கற்று கொடுத்தாய் அல்லவா...!

நினைவில் நிற்க
மறுக்கிறது பாடங்கள்
காரணம்,
என் நினைவை முழுவதும்
அடைத்து கொண்டல்லவா
அமர்ந்திருக்கிறாய் நீ...!

எனக்கும் மேஜிக் தெரியும்.
என் கண் மூடி திறக்கும்
ஓவ்வொரு நொடியும்
உன்னை, என் கண் முன்னே
தோன்றி மறைக்கிறேனே...!

சிந்தனையில் நின்று
சில சமயம் சிந்திக்கவும் வைக்கிறாய்,
பல சமயம் சிறையும் வைக்கிறாய்...!

விழி பரிமாற்றம்,
மொழி இல்லா சம்பாசனைகள,
தொடுதலில்லா தீண்டல்கள்,
இவை எதுவுமின்றி
உன் மௌனமே
எனக்கும் உனக்குமான
உறவினை உணர்த்தியது...!
ஆம்,
சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்...!

Friday, December 25, 2009

சிற்பம்

உன் நினைவுகளை
சிற்பமாக செதுக்கியுள்ளேன்
என் மனதில்...
உளி கொண்டு அல்ல,
என் உயிர் கொண்டு...

நேசிப்பேன்

தென்றலை நேசிப்பேன்
புயல் அடிக்கும் வரை...
பூவை நேசிப்பேன்
வாடி விழும் வரை...
நிலவை நேசிப்பேன்
விடியல் தொடங்கும் வரை...
உன்னை நேசிப்பேன்
என் உயிர் உள்ள வரை...

அன்பு

நீ
தேடிப்போகும் அன்பு
அழகானது...
உன்னைத்
தேடிவரும் அன்பு
ஆழமானது...

இயல்பு

சிலரை, நாம்
புரிந்து கொள்ளாததால்
வெறுக்கிறோம்...
சிலரை, நாம்
வெறுப்பதால் புரிந்து கொள்ள
மறுக்கிறோம்...

Thursday, December 24, 2009

உறக்கம்

உன் நட்பின் மடியில்
உறங்க ஆசை...
விடியும் வரை அல்ல
உயிர் பிரியும் வரை...

ஓர் உயிர் போதும்

உரிமை கொள்ள
ஆயிரம் உறவுகள்
இருந்தாலும்,
உள்ளதைப் புரிந்து கொள்ள
உன் ஓர் உயிர் போதும்...

கனவுகள்

கண்களை மூடினால்
கனவு பிறக்கும்...
ஆனால்,
கண்களை திறந்தால் தான்
கனவுகள் பலிக்கும்...

Wednesday, December 23, 2009

ஆழ்கடல்

அன்பு என்பது
ஆழ்கடல் போன்றது...
கரையில் தேடினால்,
சிப்பிகள் தான் கிடைக்கும்...
மூழ்கி தேடினால் தான்
முத்துக்கள் கிடைக்கும்
உன்னைப் போல...

கல்லறை

ஆயிரம் மலர்கள்
அலங்கரித்தாலும்,
உன் ஒரு சொட்டு
கண்ணீருக்காக
காத்திருக்கும்
என் கல்லறை ...

அன்பு பாடம்

துடிக்க மட்டும் தெரிந்த
என் இதயத்திற்கு,
தவிக்கவும் கற்றுத் தந்தது
உன் அன்பு...

Tuesday, December 22, 2009

அன்பு மலர்கள்

மனப்பந்தலில்
உன் நினைவுகளை
மலர்க் கொடியாய்
மலரவிட்டேன்...
இப்போது
பூத்துக்கிடக்கின்றன
என்னுள்
அன்பு மலர்கள்
நீ பறித்துச் சூட...

தீக்குச்சி

உன்னால் தீபங்கள்
எரியும் என்றால்,
நீ, தீக்குச்சியாய்
இருப்பதில்
ஆனந்தப்படு!!!

Friday, December 18, 2009

நம்மைப் போல

நட்பைப் பற்றிப் புரிந்து கொள்ள
நல்ல மனது வேண்டும்
என்னைப் போல...
நல்ல மனதைப் புரிந்து கொள்ள
நல்ல நட்பு வேண்டும்
உன்னைப் போல...

ஆசைப் படுகிறேன்

கண் சிமிட்டாமல்
உன்னைப் பார்க்க
ஆசைப் பட்டேன்...
ஆனால்,
இப்போதெல்லாம்
கண் சிமிட்டும் நேரமாவது
உன்னைப் பார்க்க
ஆசைப் படுகிறேன்...

எது வரை...

வெல்லும் வரை தோல்வி
சிரிக்கும் வரை கண்ணீர்
உதிரும் வரை பூக்கள்
மறையும் வரை நிலவு
மரணம் வரை உன் நட்பு...

Wednesday, December 16, 2009

நாய் குட்டி

என்ன செய்தாயடா ?
நான், உனக்கு எதிர் திசையில் நடந்தாலும்,
என் மனம் உன் பின்னாலேயே போகிறதே...
உன் வீட்டு நாய் குட்டியைப் போல...

Tuesday, December 15, 2009

கவிதைகள்

கண்ணீர் துளிகளெல்லாம்
கவிதையாகின்றன...
என் எழுதுகோலில்
மையாவதால் அல்ல...
உன்னைப் பற்றி எழுதுவதால்...

நீயும் என் இதயம் தான்

உன்னை, நான் பார்க்கவும் இல்லை
என்னை, நீ பார்க்கவும் இல்லை
ஆனால்,

எனக்காக துடிப்பதால்
நீயும் என் இதயமாகிறாய்...

Monday, December 14, 2009

ஒரு நிமிடம்

உன்னோடு பேசும்
ஒரு நிமிடம் போதும்
கண்களின் கண்ணீர் மட்டுமல்ல,
மனதின் காயங்களும் ஆறும்...

Friday, December 11, 2009

நான் இருப்பேன்

நீ சிரிக்கும் ஒவ்வொரு வினாடியும்
நான் உன் பின்னால் இருப்பேன்
உன் சிரிப்பை ரசிக்க...
நீ அழும் ஒவ்வொரு வினாடியும்
நான் உன் முன்னால் இருப்பேன்
உன் கண்ணீரை துடைக்க...

Wednesday, December 9, 2009

ஆயுட்காலம்

மனிதனின் ஆயுட்காலம்
சுமார் 60 ஆண்டுகள்...
விபரம் அறியாமலேயே
கழியும் 15 ஆண்டுகள் ...
விபரீத எண்ணங்கள்
தோன்றும் 10 ஆண்டுகள் ...
தான் குடும்பம் என்ற எண்ணம் தோன்றி
முறையே கழியும் 30 ஆண்டுகள் ...

"ரிடையர்மென்ட்" வாங்கும் வயதில் தான்
"ரிவைன்ட்" ஆகும் உன் வாழ்க்கை...
இழந்த இனிமைகள் வெளிவரும்
இமைக்காத கண்ணிலிருந்து
கண்ணீராய்...!

Tuesday, December 8, 2009

பிரிவு & நினைவு

பிரிவு என்பது
யாராலும் மறக்க முடியாத
வலி...
நினைவு என்பது
யாராலும் திருட முடியாத
பரிசு...

உன்னுடைய பரிசுகளில
என்னுடைய வலிகள்
தொலைந்து போயின...

Monday, December 7, 2009

உன் பார்வை

இரவு முழுவது விழித்திருந்தேன்
விடியும் வரைக் காத்திருந்தேன்
சூரியனைக் கண்ட மலர்போல
மலர்கிறேன்
உன்னைப் பார்த்ததும்...

Saturday, December 5, 2009

என்னருகில்

பிரிந்து இருந்து
பிரியம் காட்ட வேண்டாம்...
அருகில் இருந்து
சண்டை போடு தோழா...

அது போதும் எனக்கு...

கவிதையே

நான்
எழுதிய
கவிதைகள் பல...
என்னை எழுதிய
கவிதை நீ மட்டுமே...

உன் பிரிவால்

உயிரெழுத்துகள் இல்லாமல்
மெய் எழுத்துகளால் மட்டும்
உருவாகுமோ செந்தமிழ்...


தோழா,
உயிரெழுத்து இல்லா
தமிழானேன்
உன் பிரிவால்...

Friday, December 4, 2009

உன் நினைவுகள்

என் தூக்கத்தைக் கெடுத்தாலும்,
மனதிற்கு சுகத்தையே கொடுக்கின்றன
உன் நினைவுகள்...

Thursday, December 3, 2009

வாழ்க்கைப் புத்தகம்

தோழா,
என் வாழ்க்கைப் புத்தகத்தைப்
புரட்டிப் பார்...
அதில், உனக்கு
சாமரம் வீசாத
வார்த்தைகள்
ஒன்றும் இருக்காது...

Wednesday, December 2, 2009

காலம்

காலம்,
அன்பானவர்களை
எளிதில் பிரித்து
விடுகிறது...
அதற்க்கு தெரிவதில்லை
பிரிவு அன்பை
அதிகரிக்கும் என்பது...

நம்மைப் போல...

பிரிவு


சிறகுகள் வெட்ட வெட்ட
உயரப் பறக்க துடிக்கும்
பறவை போல...
உன்னை விட்டு பிரிய பிரிய
உன்னையே சேரத் துடிக்குது
என் மனம்...

Tuesday, December 1, 2009

அனிச்சை செயல்

கண்கள்
கலங்குகின்றன
உன்னை காணாமல்
இது தான்
அனிச்சை செயலோ?

மீண்டும் பிறந்தால்

மீண்டும் பிறந்தால்,
செருப்பாக பிறக்க
ஆசைப்படுகிறேன்...
உன்காலில் மிதிபடுவதக்காக அல்ல...
உன்னைச் சுமப்பதற்காக...