Thursday, December 31, 2009
உன்னை மறந்தால்
நாட்கள் இருக்கலாம்...
உன்னை மறந்தால்
ஒரு நிமிடம்கூட கடக்காது
என் உயிர்...
Tuesday, December 29, 2009
பிரிவில்லை
இதோ வருகிறேன்,
உன் விழியில் உறக்கமாக...!
இரவிலும் பிரிவில்லை
நம் நட்பிற்கு...!
அன்பின் அடையாளம்
என்பதைவிட ,
இனி, எப்போது சந்திப்போம்
என்றும் இதயம் தேடுகிறதே
அதுவே,
நம் அன்பின் அடையாளம்...
நான் கண்டவை
புரியாத கவிதை,
அறியாத பொருள்,
கலையாத கனவு,
இன்னும் எவ்வளவோ உள்ளன
நான் கண்டவை உன் நட்பில்...
Monday, December 28, 2009
Saturday, December 26, 2009
சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்
உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங்
இல்லாமலா
உன்னை எனக்காகவும்,
என்னை உனக்காகவும்
ஈன்றடுத்தார்கள் நம் பெற்றோர்கள்...
சொல்?
உனக்கே பொருத்தமான
உயரத்துடன் என் வளர்ச்சி
நிற்குமா என்ன?
காதருகே ஒலிக்கும்
பாடலின் இசையை
உணர முடியாத நான்,
காற்றில் கலந்து வரும்
உன் சுவாசத்தை
எவ்வாறு உணர்ந்தேன்...!
என்னுடைய தலைசிறந்த ஆசான் நீ !
ஆம்! உலகத்தை ரசிக்கவும்,
கூடவே உன்னை ரசிக்கவும்
கற்று கொடுத்தாய் அல்லவா...!
நினைவில் நிற்க
மறுக்கிறது பாடங்கள்
காரணம்,
என் நினைவை முழுவதும்
அடைத்து கொண்டல்லவா
அமர்ந்திருக்கிறாய் நீ...!
எனக்கும் மேஜிக் தெரியும்.
என் கண் மூடி திறக்கும்
ஓவ்வொரு நொடியும்
உன்னை, என் கண் முன்னே
தோன்றி மறைக்கிறேனே...!
சிந்தனையில் நின்று
சில சமயம் சிந்திக்கவும் வைக்கிறாய்,
பல சமயம் சிறையும் வைக்கிறாய்...!
விழி பரிமாற்றம்,
மொழி இல்லா சம்பாசனைகள,
தொடுதலில்லா தீண்டல்கள்,
இவை எதுவுமின்றி
உன் மௌனமே
எனக்கும் உனக்குமான
உறவினை உணர்த்தியது...!
ஆம்,
சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்...!
Friday, December 25, 2009
சிற்பம்
சிற்பமாக செதுக்கியுள்ளேன்
என் மனதில்...
உளி கொண்டு அல்ல,
என் உயிர் கொண்டு...
நேசிப்பேன்
புயல் அடிக்கும் வரை...
பூவை நேசிப்பேன்
வாடி விழும் வரை...
நிலவை நேசிப்பேன்
விடியல் தொடங்கும் வரை...
உன்னை நேசிப்பேன்
என் உயிர் உள்ள வரை...
இயல்பு
புரிந்து கொள்ளாததால்
வெறுக்கிறோம்...
சிலரை, நாம்
வெறுப்பதால் புரிந்து கொள்ள
மறுக்கிறோம்...
Thursday, December 24, 2009
ஓர் உயிர் போதும்
ஆயிரம் உறவுகள்
இருந்தாலும்,
உள்ளதைப் புரிந்து கொள்ள
உன் ஓர் உயிர் போதும்...
Wednesday, December 23, 2009
ஆழ்கடல்
ஆழ்கடல் போன்றது...
கரையில் தேடினால்,
சிப்பிகள் தான் கிடைக்கும்...
மூழ்கி தேடினால் தான்
முத்துக்கள் கிடைக்கும்
உன்னைப் போல...
Tuesday, December 22, 2009
அன்பு மலர்கள்
உன் நினைவுகளை
மலர்க் கொடியாய்
மலரவிட்டேன்...
இப்போது
பூத்துக்கிடக்கின்றன
என்னுள்
அன்பு மலர்கள்
நீ பறித்துச் சூட...
Friday, December 18, 2009
நம்மைப் போல
நல்ல மனது வேண்டும்
என்னைப் போல...
நல்ல மனதைப் புரிந்து கொள்ள
நல்ல நட்பு வேண்டும்
உன்னைப் போல...
ஆசைப் படுகிறேன்
உன்னைப் பார்க்க
ஆசைப் பட்டேன்...
ஆனால்,
இப்போதெல்லாம்
கண் சிமிட்டும் நேரமாவது
உன்னைப் பார்க்க
ஆசைப் படுகிறேன்...
எது வரை...
சிரிக்கும் வரை கண்ணீர்
உதிரும் வரை பூக்கள்
மறையும் வரை நிலவு
மரணம் வரை உன் நட்பு...
Wednesday, December 16, 2009
நாய் குட்டி
நான், உனக்கு எதிர் திசையில் நடந்தாலும்,
என் மனம் உன் பின்னாலேயே போகிறதே...
உன் வீட்டு நாய் குட்டியைப் போல...
Tuesday, December 15, 2009
கவிதைகள்
கவிதையாகின்றன...
என் எழுதுகோலில்
மையாவதால் அல்ல...
உன்னைப் பற்றி எழுதுவதால்...
நீயும் என் இதயம் தான்
என்னை, நீ பார்க்கவும் இல்லை
ஆனால்,
எனக்காக துடிப்பதால்
நீயும் என் இதயமாகிறாய்...
Monday, December 14, 2009
Friday, December 11, 2009
நான் இருப்பேன்
நான் உன் பின்னால் இருப்பேன்
உன் சிரிப்பை ரசிக்க...
நீ அழும் ஒவ்வொரு வினாடியும்
நான் உன் முன்னால் இருப்பேன்
உன் கண்ணீரை துடைக்க...
Wednesday, December 9, 2009
ஆயுட்காலம்
மனிதனின் ஆயுட்காலம்
சுமார் 60 ஆண்டுகள்...
விபரம் அறியாமலேயே
கழியும் 15 ஆண்டுகள் ...
விபரீத எண்ணங்கள்
தோன்றும் 10 ஆண்டுகள் ...
தான் குடும்பம் என்ற எண்ணம் தோன்றி
முறையே கழியும் 30 ஆண்டுகள் ...
"ரிடையர்மென்ட்" வாங்கும் வயதில் தான்
"ரிவைன்ட்" ஆகும் உன் வாழ்க்கை...
இழந்த இனிமைகள் வெளிவரும்
இமைக்காத கண்ணிலிருந்து
கண்ணீராய்...!
Tuesday, December 8, 2009
பிரிவு & நினைவு
யாராலும் மறக்க முடியாத
வலி...
நினைவு என்பது
யாராலும் திருட முடியாத
பரிசு...
உன்னுடைய பரிசுகளில
என்னுடைய வலிகள்
தொலைந்து போயின...
Monday, December 7, 2009
உன் பார்வை
விடியும் வரைக் காத்திருந்தேன்
சூரியனைக் கண்ட மலர்போல
மலர்கிறேன்
உன்னைப் பார்த்ததும்...
Saturday, December 5, 2009
என்னருகில்
பிரிந்து இருந்து
பிரியம் காட்ட வேண்டாம்...
அருகில் இருந்து
சண்டை போடு தோழா...
அது போதும் எனக்கு...
உன் பிரிவால்
உயிரெழுத்துகள் இல்லாமல்
மெய் எழுத்துகளால் மட்டும்
உருவாகுமோ செந்தமிழ்...
தோழா,
உயிரெழுத்து இல்லா
தமிழானேன்
உன் பிரிவால்...
Friday, December 4, 2009
Thursday, December 3, 2009
வாழ்க்கைப் புத்தகம்
தோழா,
என் வாழ்க்கைப் புத்தகத்தைப்
புரட்டிப் பார்...
அதில், உனக்கு
சாமரம் வீசாத
வார்த்தைகள்
ஒன்றும் இருக்காது...
Wednesday, December 2, 2009
Tuesday, December 1, 2009
மீண்டும் பிறந்தால்
செருப்பாக பிறக்க
ஆசைப்படுகிறேன்...
உன்காலில் மிதிபடுவதக்காக அல்ல...
உன்னைச் சுமப்பதற்காக...
Monday, November 30, 2009
என் இதயம்
"இதயத்தில் இருக்கும் உன் நண்பன் யார்?"
என்று ...
பாவம், அவர்களுக்கு தெரியாது,
"என் நண்பன் தான் என் இதயம்"
என்று...
Saturday, November 28, 2009
நூறுமுறை இறப்பேன்
என் மரணம் உன் மடியில் என்றால்...
இறந்த மறு நொடியே மீண்டும் பிறப்பேன்
உன் நட்பு கிடைக்கும் என்றால்...
என்றாவது ஒரு நாள்
அதிகம் பதித்தவன் நீதான்.
என்னை காணத்துடிக்கும்
உன் கண்களுக்கு சொல்லி வை
என்றாவது ஒரு நாள்
என் உறவை காண்பாய் என்று...
அது வரை வானத்தில் தெரியும்
வானவில்லை பார்த்து ரசி...
Thursday, November 26, 2009
என்றும் ஓய்வதில்லை
ஒருநாள் ஓயலாம்...
ஆனால்,
உன் நினைவலைகள்
என்றும் ஓய்வதில்லை
என் மனதில்...
Wednesday, November 25, 2009
Tuesday, November 24, 2009
காதல் கொண்டேன்
பிறகு காதல் கொண்டேன்
ஆம்,
நட்பு கொண்டது உன் மீது...
காதல் கொண்டது உன் நட்பு மீது...
ரசிதுவிடு
கடந்து செல்லும்போதே
வாழ்கையை ரசிதுவிடு...
இல்லையேல்,
காலம் இருக்கும்
வாழ்க்கை இருக்காது...
Monday, November 23, 2009
விசித்திரம்
உன் நினைவுகளும்
விசித்திரமானவை தான்...
உன்னிடம்,
என்றோ சிரித்ததை நினைத்தால்
இன்று அழுகை வருகிறது...
என்றோ அழுததை நினைத்தால்
இன்று சிரிப்பு வருகிறது...
என்னைப்போல் ஒருவன்
உன்னை போலவே
தெரிகிறது...
ஆனால்,
உன்னைப் பார்த்தல் மட்டும்
என்னைப் போல
தோன்றுகிறது...
பிடிக்கவில்லை...
இந்த உலகில்
பிடித்தவர்கள் அனைவரையும்
பிடிக்காமல் போய்விட்டது
காரணம்
உன்னை அதிகமாக
பிடித்திருப்பதால்...
Saturday, November 21, 2009
Friday, November 20, 2009
நீயும் நானும்
வானமும் பூமியுமாய்
என்றாவது ஒரு நாள்
தொட்டுக்கொள்வோம் என்று
இன்னும் பார்த்து கொண்டே
இருக்கிறோம்...
உன்னை காணாமல்
உதடுகள் பேசவில்லை,
இதயம் மட்டும்
வலியால் துடிக்கிறது
உன்னை காணாமல்...
Thursday, November 19, 2009
Wednesday, November 18, 2009
கண்ணாடி
ஆயிரம் கண்ணாடிகள்!!!
என் அகம் காட்டும் கண்ணாடி
என்னவள் மட்டுந்தானே!!!
Tuesday, November 17, 2009
Monday, November 16, 2009
வலிக்கிறது
பூக்களுக்கு வலிப்பதில்லை...
ஆனால்,
உன் நினைவுகள் மோதி
என் உள்ளம் வலிக்கிறது
சுமையாக அல்ல
சுகமாக...
Thursday, November 12, 2009
ஒன்றும் இல்லை
ஒன்றும் இல்லை
என் உயிரை தவிர...
இழப்பதற்கு பெரிதாக
ஒன்றும் இல்லை
உன் அன்பை தவிர....
யாரும் இல்லை
யாரும் இல்லை
என் அன்பை தவிர...
என்னை கொல்வதற்கு
யாரும் இல்லை
உன் பிரிவை தவிர....
Wednesday, November 11, 2009
ஒரேழுது கவிதை
அன்பு, நட்பு பற்றி
கவிதை எழுத சொன்னாய்
நீ சொல்லி முடிக்கும் முன்னே
நான் எழுதி முடித்தேன்
"நீ"
Monday, November 9, 2009
என் மரணம்
என் நேசிப்பு ...
உன் வார்த்தை மட்டுமே
என் கவிதை ...
உன் பார்வை மட்டுமே
என் வெட்கம் ...
உன் ஸ்பரிசம் மட்டுமே
என் உணர்வு ...
உன் சுவாசம் மட்டுமே
என் மூச்சு...
உன் இதயம் மட்டுமே
என் இருப்பிடம்...
உன் கோபம் மட்டுமே
என் கண்ணீர்...
உன் வேதனை மட்டுமே
என் வலிகள்...
நீ மட்டுமே நான் ...
உன் பிரிவு மட்டுமே
என் மரணம்...
Sunday, November 8, 2009
யாதுமாகினாய்...
Friday, November 6, 2009
ஒவ்வொரு நிமிடமும்
உன்னுள் தொலைந்த என்னை ,
நினைக்கும் ஒவ்வொரு நிமிடமும் ,
என் மனமும் உன்னை நேசிக்கும் ,
நினைக்காத நிமிடமும்
உன் அன்பை சுவாசிக்கும் ..
வேண்டும்
உன்னை மறக்காத
இதயம் வேண்டும் ...
இன்னும்
ஒரு ஜென்மம் என்றால்
நீயே வேண்டும்
என்னுயிர் தோழனாய்...
Thursday, October 8, 2009
நினைத்துக்கொண்டிருக்கிறேன்
என் ஆழ்மனதில்
பதித்து வைத்திருப்பதால்
என் நினைவுகளின்றி
உன்னையே
நினைத்துக்கொண்டிருக்கிறேன்
எப்போதும்...
உன் நட்பு
வளர்ந்ததும் தெரியாது
நகம் போன்றது...
திருப்பி கொடுத்து
தீர்த்து கொள்ளும்
கடனுமல்ல...
எப்படி மறப்பது?
உன்னை மறந்து விடலாம்...
இதயமே உன் நட்பாக இருந்தால்,
எப்படி மறப்பது?...
நீ வேண்டும் தோழா
வானம் வேண்டும்....
மரம் வளர
நிலம் வேண்டும்...
மீன் வாழ
தண்ணீர் வேண்டும்...
என் உயிர் வாழ
நீ வேண்டும் தோழா...
அழகு காலம்
கார்காலம்,
பனிக்காலம்...
எந்த மாதம் என்று எனக்கு தெரியாது...
ஆனால்,
நீ பிறந்த மாதம்
எனக்கு அழகு காலம்...
ஜீவ மொழி
உன் நட்பெனும் சாவியால் திறந்தாய்.
என் வாழ்வு சந்தோசமானது...
உன் வருகையால்
என் சுவாசம் என்றும்
உன் நட்பு ஒன்றிற்காக தான்...
என் மனதில் உயிர் உள்ள ஜீவ மொழி
உன் வார்தைகள் தான்...
Wednesday, September 30, 2009
சாய்ந்து விட்டு போ
உள்ள மரம் நான்.
தினமும் ஒரு முறையாவது
என் மீது சாய்ந்து விட்டு போ.
என் அன்பு உன் மீது
பூக்களாக மலரும்...
இதயத்துடிப்பாய்...
இரவு பகலென்று பாராமல்,
இருந்தும் மறக்க முடியவில்லை
நீ என் மேல் காட்டும் அன்பு
நீ பேசும் அன்பான வார்த்தைகள்
இன்னும் ஒலித்து கொண்டே உள்ளது
என் இதயத்துடிப்பை போல.
கடவுளுக்கு நன்றி
என் உள்ளம் பிரகாசிக்க...
என் சோகங்கள் சிதறின...
என் கனவு கவிதை ஆயின...
வெண்மதியை தூது அனுப்பி
கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்
உன்னை எனக்கு தந்தமைக்கு...
உனதுயிர் ஆனேன்
நேர்மை ஆனேன்...
அறிவை காட்டினாய்
விவேகம் ஆனேன்...
அன்பை காட்டினாய்
தாகம் ஆனேன்...
உறவை காட்டினாய்
உனதுயிர் ஆனேன்...
என்ன தந்தாய்....
கவிதை தந்தாய் உறவு வளர்த்திட...
பாடல் தந்தாய் மனம் குளிர்திட....
இ-மெயில் தந்தாய் என் நாளை உயிர்த்திட...
உன் பெயரை சொல்வேன்
எது என்று கேட்டால்
உன் நட்பு என்பேன்...
நட்பை கேட்டால்
என் உயிர் என்பேன்...
உயிரின் பெயரை கேட்டால்
உன் பெயரை சொல்வேன்....
Tuesday, September 15, 2009
நீ என்னுடன் இல்லை
சுவாசமாக நேசிக்க
நீ என்னுடன் இல்லை !
பார்த்ததை படித்ததை பற்றி பேசவிரும்பும்போது
கருத்து பறிமாற்றத்திற்கு
நீ என்னுடன் இல்லை !
மனதின் ஆர்வம் குறைகின்றபோது
உற்சாகத்திற்கு உயிர்கொடுக்க
நீ என்னுடன் இல்லை !
ஆனால்,
நான் நினைக்கும்போது இதயத்தில்
உணர்வுகளில் என் உயிரினில்
நீ கலந்து இருக்கிறாய் !!!
நான் மட்டும்
இடம் கொடுக்க பலர் உன்டு...
உன் நட்புக்காக இதயத்தையே
கொடுக்க நான் மட்டும் உன்டு...
நேசி
அறிவை நேசி !
பணத்தை நேசிக்காதே
பாசத்தை நேசி !
ஆடம்பரத்தை நேசிக்காதே
அடக்கத்தை நேசி !
ஆணவத்தை நேசிக்காதே
அன்பை நேசி !
ஏனெனில்,
ஆணவம் அழிவுப்பாதையை
விரைவில் நோக்கி செல்லும் !!!
நட்பு வாடினால்
தண்ணீரை விடுவேன் !
மனம் வாடினால்
கண்ணீரை விடுவேன் !
நம் நட்பு வாடினால்,
என் உயிரை விடுவேன் !!!
Thursday, September 10, 2009
என்றும் அழகு
பூவை விட,
ஒரு நொடியில் பூக்கும்
உன் புன்னைகை
என்றும் அழகுதான்
எனக்கு...
Monday, September 7, 2009
மனமில்லை
தண்ணீர் குடிக்க
மனமில்லை..
நினைப்பது
நீ என்பதால்
நீடிக்கட்டும்
சில நிமிடங்கள்
என்று..
Saturday, September 5, 2009
சூரியகாந்தி பூ
உறங்காமல்
தேய்ந்து கொண்டிருக்கும்
நிலவு போல இருந்த
நான்
இன்று,
ஏனோ உணர்கிறேன்,
உன் அன்பை
சூரியனை பார்த்த
சூரியகாந்தி பூ போல....
விடுமுறை
ஒரு நாள் விடுமுறை
வானத்தில்....
ஆனால்,
உன் நினைவுக்கு
என்றும் விடுமுறை
இல்லை என் மனதில்...
Monday, August 31, 2009
Saturday, August 29, 2009
சிறந்தது
உயிர்களில் சிறந்தது மனிதன்...
மனிதர்களில் சிறந்தது பெண்கள்...
பெண்களில் சிறந்தது நீ...
உன்னுள் சிறந்தது ???
உன்னுடையது எனப்படும்
அனைத்துமே சிறந்தது தானே...
Thursday, August 27, 2009
என்றும் நான் உண்டு...
இதயம் உண்டு...
உன்னை பார்க்க
கண்கள் உண்டு...
உன் பேசை கேட்க
செவி உண்டு...
உன்னையே நினைத்துக்கொண்டிருக்க
என்றும் நான் உண்டு...
துணையாக..
வெளிச்சம் உள்ளவரைதான்
துணைக்கு வரும்...
ஆனால்,
என்னுடைய அன்பு
உயிர் உள்ளவரை
துணையாய் வரும்....
உன்னோடு....
Saturday, August 22, 2009
Wednesday, August 19, 2009
உண்மை...
என்பது எவ்வளவு உண்மையோ...
அவ்வளவு உண்மை
நீ எனக்குள் இருக்கிறாய் என்பதும்...
Wednesday, August 12, 2009
தேவதையின் குணங்கள்
வெளிச்சம் இருக்கும்தானே...
உன்னை பார்த்ததும்
கவிதைகள் பிறக்கும்தானே...
உனக்குள்ளும் இத்தனை
நட்பு இருக்கும்தானே...
நிச்சயம் இருக்கும்...
இவை தேவதைகளுக்கான குணங்கள்...
உனையன்றி யார் பெற்றிருப்பார்???...
உன் பெயர்..
தவற விட்ட புன்னகையை..
இன்று மொத்தமாய் உதிர்க்கிறேன்...
உன் பெயரை காணும் வழியெங்கும்..!!!
மறந்துவிட்டேன்
ஆனால்,
தொடரும் உன் நினைவுகளால்
அந்த நினைப்பையே
நான் மறந்துவிட்டேன்...!!
Monday, August 10, 2009
புரிந்து கொள்க...
நம்மை நினைப்பதில்லை...
நம்மை புரிந்து கொண்ட எதுவும்
நம்மை விட்டு விலகுவதில்லை...
வெற்றிப் பயணம்
இலக்காக நினைத்து கொண்டு,
இவ்வுலக முடிவுவரை
நான் மேற்கொள்ள விரும்பும்
வெற்றிப் பயணம்...
நம் நட்பு!!!!!
Saturday, August 8, 2009
உயிர் உள்ளவரை
பணம் உள்ளவரை மரியாதை..
நேசம் உள்ளவரை பாசம்..
என் உயிர் உள்ளவரை நம் நட்பு ....
Thursday, August 6, 2009
Wednesday, August 5, 2009
பிரிவு இல்லை
பரந்த கடலில் அலை இல்லை
திறந்த வானில் கதவு இல்லை
சிறந்த நட்பில் பிரிவு இல்லை....
Tuesday, August 4, 2009
விவாதம் செய்யாதே
யாரிடமும் விவாதம்
செய்யாதே...
அதில்
தோற்றால்,
ஒரு நம்பிக்கையை
இழப்பாய்...
வெற்றி பெற்றால்,
ஒரு எதிரியை
பெறுவாய்....
Monday, August 3, 2009
அருகில் இருப்பாயா???
எல்லாரும் அன்பானவர்கள் இல்லை...
அன்பானவர்கள் எல்லாரும்
அருகில் இருப்பதும் இல்லை...
உன்னைப் போல...
பிரிவதில்லை
கண்ணை விட்டு
பிரியலாம்...
ஆனால்,
பழகிய இதயங்கள்
நெஞ்சை விட்டு
பிரிவதில்லை...
Saturday, August 1, 2009
ஓர் ஒற்றுமை
உன் பேனாவிற்கும்,
ஓர் ஒற்றுமை
இரண்டுமே
குத்திக் கிழிப்பது
என் இதயத்தை அல்லவா...
Friday, July 31, 2009
Wednesday, July 29, 2009
எனக்கு சம்மதமே
கிடைக்காமல் போகலாம்...
ஆனால்,
உன்னால் கிடைக்கும்
எதுவும் எனக்கு சம்மதமே...
Wednesday, July 22, 2009
என் மனம்!!!!
இடைவெளி விட்டுதான்
துடிக்கும் தினம்!!
அந்த
இடைவெளியில் கூட
உன்னைப் பற்றிதான்
நினைக்கும் என் மனம்!!!!
நீ இருக்கும் வரை...
என் இதயம் துடிக்கும் வரை...
என் இதயம் துடித்திருக்கும்
அதில் நீ இருக்கும் வரை...
எனது கண்ணீர்
பூமிக்கு மழையானது..
பூமியின் கண்ணீர்
புற்களில் பனித்துளியானது..
எனது கண்ணீர்
உனக்காக கவிதையானது..
உன் வார்த்தைகள்
எனக்காக பேசிய போதுதான
உணர்ந்தேன் உன் நட்பின் ஆழத்தை....
என்றும் கேட்கும்
உன் வார்த்தைகள்
என் காதினில் மெலிசையாய்....
என்றும் வாழும்
நினைவுகள் இறப்பதில்லை...
என்னுள் மேலும் ஓர் உயிராய்
என்றும் வாழும்உன் நினைவுகள்!!!!!
இன்னும் ஓர் உயிர்
எத்தனையோ இருந்தாலும்...
அனைத்தையும் மறந்து ரசித்தேன்
உன் நினைவுகளை மட்டும்...
மரணமில்லா உன் நினைவுகள்
இன்னும் ஓர் உயிர் அல்லவா எனக்கு.....
உயிர் உள்ளவரை
கலைந்து போக
இது கனவும் இல்லை.....
காரணம்சொல்லி
பிரிந்து போக
அது காதலும் இல்லை
உயிர் உள்ளவரை
இருக்கும் நமது நட்பு.....
என் உயிராக....
உன்னை மறக்காத
இதயம் வேண்டும்...
மீண்டும் ஜனனம் என்றால்,
அதில் நீயே வேண்டும்
உரவாக அல்ல
என் உயிராக....
எப்படி மறப்பது..?
நீ இருந்தால்
மறந்து விடலாம்..
இதயமே
நீயாக இருந்தால்
எப்படி மறப்பது..?
Saturday, June 20, 2009
என் மனதில்
இரவில் தோன்றும்...
சூரியன் என்றும்
பகலில் தோன்றும்....
ஆனால்
உன் நினைவு என்றும்
என் மனதில் இருக்கும்....
என் நன்றி...
கடவுளுக்கு நன்றி சொன்னேன்.
அதற்கு கடவுள்
நன்றி எனக்கு சொல்ல வேண்டாம்..
உன் நண்பனை இந்த பூமிக்கு
கொண்டு வந்த
அன்னைக்கு சொல் என்றார்...
அதனால..
என் நன்றி என்றும்
உன் அன்னைக்கே.....
உன் குரல்
முதல் அழுகை கேட்டு படும்...
ஆனந்தத்தை போல...
ஆனந்த பட்டேன்...
உன் குரல் கேட்டு...
என்றும் நீ எனக்கு..
பூமிக்கு வானம் போல...
மீனுக்கு தண்ணீர் போல...
என்றும் நீ எனக்கு...
Monday, June 15, 2009
உன்னில்
மீன் எப்பவும் தண்ணிரில்....
பூ எப்பவும் மரத்தில்....
அது போல...
நான் எப்பவும் உன்னில்....
Wednesday, June 10, 2009
Monday, June 8, 2009
நீ எனக்கு...
நீல வானத்தின் மேல் முகிலுக்கு ஆனந்தம்...
விளக்கு மேல் தீபத்துக்கு உறவு...
அது போல நீ எனக்கு ....
Friday, May 29, 2009
உன் நினைவு
கடிகார முட்கள் போல,
உந்தன் நினைவு
ஓடி கொண்டு இருக்கும்,
என்றும் என் மனதில்....
Thursday, May 28, 2009
உன் சுவாசம்
பூமிக்கும்
இடையில் தவழ்ந்த நான்
இன்று காற்று போலாகி
உன் சுவாசமாகி நலமுடன்
உன் இதயத்தை அடைந்தேன்.
Wednesday, May 27, 2009
உன் நினைவு
அதுக்குள் இருப்பது முத்து...
எனக்குள் இருப்பது இதயம்
அதுக்குள் இருப்பது உன் நினைவு...
நட்பு கவிதை
என் இதயமும் ...
பேசிக் கொண்டிருந்தன
மௌன மொழியிலே...
அதனால் ...
இன்று நாம் நட்பு கவிதையானோம்...
Friday, May 22, 2009
மின்னுகிறேன்
பூவின் வாசனை தெரிகிறது.
காற்று முகில்களை தழுவும் போது ...
முகில் நாணி மழை ஆகிறது.
நீ என்னை தழுவியதால்..
மின்னுகிறேன் நட்சத்திரமாக இன்று...
Thursday, May 21, 2009
என்னில் நீ..
நீல வானத்தில் தவழு வெண்முகில் போல...
சூரியனை பார்த்த சூரியகாந்தி பூ போல...
இன்று உணருகிறேன் உன்னை என்னில்...
வேறு ஒன்றும் எனக்கு தெரியவில்லை
கவிதை கேட்டாய்...
எழுதுவதற்கு
பல வார்த்தைகள்
நினைவில் வந்தன....
ஆனால்,
உன் நினைவை,
உன் உறவை,
உன் அன்பை விட
இனிமையாக வேறு ஒன்றும்
எனக்கு தெரியவில்லை...
Tuesday, May 19, 2009
உன் உறவு
உன் குரல் செவிபறைக்கு விருந்து...
உன் நினைவு என் உயிர்க்கு அமுது...
மொத்தத்தில்
நீ எனக்கு வாழ்வில் எழில் தந்த உறவு....
Saturday, May 16, 2009
பிரிவு
தேய்ந்து கொண்டிருக்கும் நிலவு போல் -
இன்று உணர்கிறேன் உன் பிரிவால்......
Tuesday, May 12, 2009
இதயம் துடிக்கும்வரை
அது உயிர்த்திருக்க வேண்டும் உன்னிடம்
என் இதயம் துடிக்கும்வரை....
கடவுளிடம் ஒரு வரம்
என் கவிதைக்கு உயிர் கொடுத்த நண்பனை
பத்திரமாக பாதுகாத்து என்னிடம் தா-
நம நட்பு பயணத்தை தொடர..........
Saturday, May 9, 2009
மூச்சை போல
எப்போதாவது தான் உடன் இருக்கும்.
சில உறவுகள் மூச்சை போல
எப்பவும் உடன் இருக்கும்,
நம் நட்பை போல.......
தொடரும் நம் நட்பு
அடிக்கடி பேசிக் கொண்டோம்....
உறவுகளுக்கு மேலே நட்பு ஆனோம்...
காலங்கள் கடந்து சென்றாலும்
கடைசிவரை தொடரும் நம் நட்பு....
நிரந்தரமான நினைவுகள்
பிரிவும் நிரந்தரமல்ல,
நாம் நட்பாக பழகிய
இந்த இனிய நினைவுகள் மட்டுமே நிரந்தரம்.
கை ரேகை
எதிர்காலத்தை நம்பி விடாதே!
ஏன் என்றால்..
கை இல்லாதவனக்கும்
எதிர் காலம் உண்டு..!
விட்டுக்கொடுத்து விடாதே
அவர்களக்காக சிலவற்றை விட்டுக்கொடு!
உனக்காக யார் வாழ்கிறார்களோ...
அவர்களை யாருக்காகவும்
விட்டுக்கொடுத்து விடாதே..!
வாழ்க்கை ஒரு பட்டாம் பூச்சி
லேசா பிடித்தால் பரந்திடும்...
இருக்கிப பிடித்தால் இறந்திடும்...
கவணமாக கையாள வேண்டும்.
நட்பை நேசி
காதலை நேசி... ஆனால்,
சந்தோஷமே வாழ்க்கையாக வேண்டுமென்றால்
நட்பை நேசி.....
நட்பை நேசிக்கும் ஓர் உள்ளம்
நீ மறந்து விடலாம்... ஆனால்,
உன்னை நேசித்த உள்ளத்தை மட்டும்
உன்னால் மறக்க முடியாது..!
நட்பை நேசிக்கும் ஓர் உள்ளம்.
Friday, May 8, 2009
உன் நினைவுகள்
அதன் வெளிச்சம் பூமியில் தான.
அது போல நீ எங்கு இருந்தாலும்
உன் நினைவுகள் என்றும் என் மனதில் தான்.
நட்பு சிறை
தவறுகள் செய்தால் தண்டித்து விடு
ஆனால்
விடுதலை மட்டும் செய்துவிடாதே.
உன்னுடன் இருக்கும் நேரம்
மதிய நேரம்,
மாலை நேரம்
எந்த நேரமும் எனக்கு தெரியாது
உன்னுடன் இருக்கும் நேரத்தை தவிர....
நான் உயிரோடு இருக்கும் வரை
உன் உறவுடன் இருக்கும் வரை
உன் நட்பை சுவாசித்து கொண்டு இருப்பேன்
இல்லை நேசித்து கொண்டு இறப்பேன்
Thursday, May 7, 2009
உன்னை நினைத்து
நேசித்து பார் உறவு வரும்,
உன்னை நினைத்து பார்த்தால் கவிதை வரும.
நண்பனின் பெயர்
ஆனால் என் கைகள் தானா கிறுக்கியது
என் நண்பனின் பெயரை மட்டும்......
காலை வணக்கம்
ஆதவன் தன் அழகில் என்றும் இல்லாத ஒரு பொழிவு இருந்தது.
பொழிவுடன் காலை வணக்கம் என்றது.
வியந்து நான் பார்க்க செய்தி ஒன்று சொன்னது,
"வாழ்த்தியது நான் அன்று வாழ்த்து சொன்னது உன் நண்பன் இன்று."
நட்பு
மலர் இல்லாமல் மணம் இல்லை..
உயிர் இல்லாமல் உடல் இல்லை..
உன் நட்பு இல்லாமல் நான் இல்லை....
காதலர்கள் & நண்பர்கள்
ஆனால்
இதயத்தையே இடமாக கொடுப்பவர்கள் நண்பர்கள்.