Friday, May 29, 2009

உன் நினைவு

கடிகாரத்தில் உள்ள
கடிகார முட்கள் போல,
உந்தன் நினைவு
ஓடி கொண்டு இருக்கும்,
என்றும் என் மனதில்....

Thursday, May 28, 2009

உன் சுவாசம்

ஆகாயத்துக்கும்,
பூமிக்கும்
இடையில் தவழ்ந்த நான்
இன்று காற்று போலாகி
உன் சுவாசமாகி நலமுடன்
உன் இதயத்தை அடைந்தேன்.

புது கவிதை

உனக்காக கவிதை
இனி இல்லை...
தோழா-இனி
நீயே எனது
புது கவிதை...

Wednesday, May 27, 2009

உன் நினைவு

கடலுக்குள் இருப்பது சிப்பி
அதுக்குள் இருப்பது முத்து...
எனக்குள் இருப்பது இதயம்
அதுக்குள் இருப்பது உன் நினைவு...

நட்பு கவிதை

உன் இதயமும் ...
என் இதயமும் ...
பேசிக் கொண்டிருந்தன
மௌன மொழியிலே...
அதனால் ...
இன்று
நாம் நட்பு கவிதையானோம்...

Friday, May 22, 2009

மின்னுகிறேன்

தென்றல் பூவை தழுவும் போது...
பூவின் வாசனை தெரிகிறது.
காற்று முகில்களை தழுவும் போது ...
முகில் நாணி மழை ஆகிறது.
நீ என்னை தழுவியதால்..
மின்னுகிறேன் நட்சத்திரமாக இன்று...

Thursday, May 21, 2009

என்னில் நீ..

வான் நிலவை மேருடும் பௌர்ணமியாக...
நீல வானத்தில் தவழு வெண்முகில் போல...
சூரியனை பார்த்த சூரியகாந்தி பூ போல...
இன்று உணருகிறேன் உன்னை என்னில்...

வேறு ஒன்றும் எனக்கு தெரியவில்லை

ஒரு வார்த்தையில்
கவிதை கேட்டாய்...
எழுதுவதற்கு
பல வார்த்தைகள்
நினைவில் வந்தன....
ஆனால்,
உன் நினைவை,
உன் உறவை,
உன் அன்பை விட
இனிமையாக வேறு ஒன்றும்
எனக்கு தெரியவில்லை...

Tuesday, May 19, 2009

உன் உறவு

உன் சிரிப்பு இதயத்துக்கு மருந்து...
உன் குரல் செவிபறைக்கு விருந்து...
உன் நினைவு என் உயிர்க்கு அமுது...
மொத்தத்தில்
நீ எனக்கு வாழ்வில் எழில் தந்த உறவு....

Saturday, May 16, 2009

பிரிவு

சூரியனை பிரிந்து உறங்காமல்
தேய்ந்து கொண்டிருக்கும் நிலவு போல் -
இன்று உணர்கிறேன் உன் பிரிவால்......

Tuesday, May 12, 2009

இதயம் துடிக்கும்வரை

பத்திரமாய் பார்த்துகொள் என் நட்பை
அது உயிர்த்திருக்க வேண்டும் உன்னிடம்
என் இதயம் துடிக்கும்வரை....

கடவுளிடம் ஒரு வரம்

நான் கடவுளிடம் ஒரு வரம் கேட்டன்
என் கவிதைக்கு உயிர் கொடுத்த நண்பனை
பத்திரமாக பாதுகாத்து என்னிடம் தா-
நம நட்பு பயணத்தை தொடர..........

Saturday, May 9, 2009

மூச்சை போல

சில உறவுகள் புன்னகை போல
எப்போதாவது தான் உடன் இருக்கும்.
சில உறவுகள் மூச்சை போல
எப்பவும் உடன் இருக்கும்,
நம் நட்பை போல.......


உதிரா நட்பு

உலகில் பூக்கும் பூவெல்லாம் உதிரலாம் - ஆனால்
நம் நட்பு என்றும் உதிராது.

தொடரும் நம் நட்பு

அறிமுகம் இல்லாமல் வந்தோம்.....
அடிக்கடி பேசிக் கொண்டோம்....
உறவுகளுக்கு மேலே நட்பு ஆனோம்...
காலங்கள் கடந்து சென்றாலும்
கடைசிவரை தொடரும் நம் நட்பு....

நிரந்தரமான நினைவுகள்

உறவும் நிரந்தரமல்ல
பிரிவும் நிரந்தரமல்ல,
நாம் நட்பாக பழகிய
இந்த இனிய நினைவுகள் மட்டுமே நிரந்தரம்.

கை ரேகை

உன் கை ரேகையைப் பார்த்து
எதிர்காலத்தை நம்பி விடாதே!
ஏன் என்றால்..
கை இல்லாதவனக்கும்
எதிர் காலம் உண்டு..!

விட்டுக்கொடுத்து விடாதே

நீ யாருக்காக வாழ்கிறாயோ...
அவர்களக்காக சிலவற்றை விட்டுக்கொடு!
உனக்காக யார் வாழ்கிறார்களோ...
அவர்களை யாருக்காகவும்
விட்டுக்கொடுத்து விடாதே..!

வாழ்க்கை ஒரு பட்டாம் பூச்சி

வாழ்க்கை ஒரு பட்டாம் பூச்சி மாதிரி
லேசா பிடித்தால் பரந்திடும்...
இருக்கிப ஢பிடித்தால் இறந்திடும்...
கவணமாக கையாள வேண்டும்.

நட்பை நேசி

வாழ்க்கையில் சந்தோஷம் வேண்டுமென்றால்
காதலை நேசி... ஆனால்,
சந்தோஷமே வாழ்க்கையாக வேண்டுமென்றால்
நட்பை நேசி.....

நட்பை நேசிக்கும் ஓர் உள்ளம்

உன் உள்ளம் நேசிப்பதை
நீ மறந்து விடலாம்... ஆனால்,
உன்னை நேசித்த உள்ளத்தை மட்டும்
உன்னால் மறக்க முடியாது..!
நட்பை நேசிக்கும் ஓர் உள்ளம்.

Friday, May 8, 2009

உன் நினைவுகள்

நிலவு விண்ணில் இருந்தாலும்
அதன் வெளிச்சம் பூமியில் தான.
அது போல நீ எங்கு இருந்தாலும்
உன் நினைவுகள் என்றும் என் மனதில் தான்.

நட்பு சிறை

உன் நட்பு என்னும் சிறையில் சிக்கி கொண்டேன்.
தவறுகள் செய்தால் தண்டித்து விடு
ஆனால்
விடுதலை மட்டும் செய்துவிடாதே.

உன்னுடன் இருக்கும் நேரம்

காலை நேரம்,
மதிய நேரம்,
மாலை நேரம்
எந்த நேரமும் எனக்கு தெரியாது
உன்னுடன் இருக்கும் நேரத்தை தவிர....

நான் உயிரோடு இருக்கும் வரை

நான் உயிரோடு இருக்கும் வரை
உன் உறவுடன் இருக்கும் வரை
உன் நட்பை சுவாசித்து கொண்டு இருப்பேன்
இல்லை நேசித்து கொண்டு இறப்பேன்

Thursday, May 7, 2009

வார்த்தைகள் இல்லை

வார்தைகள் எதட நண்ப
உந்தன் நினைவில் வாழும்
இனிய நிமிடங்களை உரைக்க..........

நட்பென்பது

நட்பென்பது ஊசலாடும் உறவல்ல ..
உயிரோட்டமுள்ள உணர்வு....

உன்னை நினைத்து

சிரித்து பார் மகிழ்ச்சி வரும்,
நேசித்து பார் உறவு வரும்,
உன்னை நினைத்து பார்த்தால் கவிதை வரும.

நண்பனின் பெயர்

கவிதை வேணும் என்று பேனா எடுத்தேன்.
ஆனால் என் கைகள் தானா கிறுக்கியது
என் நண்பனின் பெயரை மட்டும்......

காலை வணக்கம்

அன்றாட வாழ்விலே இன்று ஒரு மாற்றம் வந்தது,
ஆதவன் தன் அழகில் என்றும் இல்லாத ஒரு பொழிவு இருந்தது.
பொழிவுடன் காலை வணக்கம் என்றது.
வியந்து நான் பார்க்க செய்தி ஒன்று சொன்னது,
"வாழ்த்தியது நான் அன்று வாழ்த்து சொன்னது உன் நண்பன் இன்று."

நட்பு

கடல் இல்லாமல் தரை இல்லை..
மலர் இல்லாமல் மணம் இல்லை..
உயிர் இல்லாமல் உடல் இல்லை..
உன் நட்பு இல்லாமல் நான் இல்லை....

காதலர்கள் & நண்பர்கள்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள்
ஆனால்
இதயத்தையே இடமாக கொடுப்பவர்கள் நண்பர்கள்.