உன் கோவம்
உன்னை நேசிப்பவர்களை
யோசிக்க வைக்கும்...
ஆனால்,
உன் அன்பு,
உன்னை வெறுப்பவர்களையும்
நேசிக்க வைக்கும்...
Tuesday, December 28, 2010
உணர்ந்தேன்
பிறப்பை
நான் பிறந்து
உணர்ந்தேன்...
இறப்பை
நான் இறக்காமல்
உணர்ந்தேன்...
நீ இல்லாத நேரங்களில்...
நான் பிறந்து
உணர்ந்தேன்...
இறப்பை
நான் இறக்காமல்
உணர்ந்தேன்...
நீ இல்லாத நேரங்களில்...
Sunday, December 26, 2010
உறக்கத்தில்
உறக்கத்தில்
உன் சத்தம் கேட்டு
எழுந்து விட்டேன்...
ஆனால்,
நீ இல்லை...
பின்பு தான்
தெரிந்தது,
அது,
என் இதயத்தில்
துடித்துக்கொண்டிருக்கும்
உன் நினைவுகள்
என்று...
உன் சத்தம் கேட்டு
எழுந்து விட்டேன்...
ஆனால்,
நீ இல்லை...
பின்பு தான்
தெரிந்தது,
அது,
என் இதயத்தில்
துடித்துக்கொண்டிருக்கும்
உன் நினைவுகள்
என்று...
Saturday, December 25, 2010
Tuesday, December 21, 2010
நாட்கள் இல்லை
வின்னில நிலவு
இல்லாத நாட்களும் உண்டு...
மண்ணில் மழை
இல்லாத நாட்களும் உண்டு...
ஆனால்,
என்னில் உன் நினைவு
இல்லாத நாட்கள் இல்லை...
இல்லாத நாட்களும் உண்டு...
மண்ணில் மழை
இல்லாத நாட்களும் உண்டு...
ஆனால்,
என்னில் உன் நினைவு
இல்லாத நாட்கள் இல்லை...
Saturday, December 18, 2010
என்னை மறந்துவிடாதே
பூத்த மலரை கிள்ளிவிடாதே...
கிள்ளிய மலரை சூடிவிடாதே...
சூடிய மலரை வாடவிடாதே...
வாடிய மலரை எறிந்துவிடாதே...
எறிந்த மலரைப் போல்
என்னை மறந்துவிடாதே....
கிள்ளிய மலரை சூடிவிடாதே...
சூடிய மலரை வாடவிடாதே...
வாடிய மலரை எறிந்துவிடாதே...
எறிந்த மலரைப் போல்
என்னை மறந்துவிடாதே....
Tuesday, December 14, 2010
Monday, November 29, 2010
உள்ளச் சிறையில் நான்
உள்ளச் சிறையில் நான்
நான் என் விடுதலையை விரும்பவில்லை
நீ என் விடுதலையை விரும்பினால்,
என் உடல் என் உயிரின் விடுதலையை விரும்பும்.
நான் என் விடுதலையை விரும்பவில்லை
நீ என் விடுதலையை விரும்பினால்,
என் உடல் என் உயிரின் விடுதலையை விரும்பும்.
Monday, October 11, 2010
ஒற்றை பனித்துளி
அதி காலை பொழுது,
அமைதியாய் பனி பொழி
காலம்....
சற்று முன் பிறந்த பனித்துளி...
தான் அறியா? புவியை நோக்கி
ஆவலுடன்....
இனம் புரியா..
இரகசியம்...
சொல்லிபுரியா அனுபவம்...
முதன் முதலாய் முத்தமிட்டது..
தான் விழுந்த மலரின்
இதழ் ஓரத்தில்....
அட ...!
எத்தனை மென்மை...
கவர்ந்திழுக்கும் வண்ணத்தில்
வசமிழுக்கும் வாசனை ...!
வர்ணிக்க தெரியா
பிஞ்சு பனித்துளி
முழுவதுமாய் இரசிப்பதற்குள்...!
ஒய்யாரமாய் பறந்து வந்த
பட்டாம்பூச்சி...!
படக்கென அமர்ந்தது
பனி இரசித்த மலர்மேலே...!
பயந்து போன பனித்துளி...
மலர்ந்து விட்ட மலரை விட்டு
இறங்கியது...
மலர் பாரம் தாங்காது என்று ....
வேறொன்றை
மீண்டும் முத்தமிட
மறுத்த பனித்துளி
மொதிச் சிதைந்தது ..
புவி மேலே....
யாருக்கு புரியும்.....
இந்த ஒற்றை பனித்துளியின்
காதல்...
அந்த ஒரு நிமிடம் தாங்கிய
மலர் மேலே...!
Tuesday, July 13, 2010
என் பயணங்களில்
வேகமாய்
கடக்கும் மரங்கள்...
உயரமாய்
பறக்கும் பறவைகள்...
அருகில் அமர்திருக்கும்
ஜன்னல் கம்பிகள்...
என் கவனத்தை
ஈர்க்க முயலும்,
மோதும் காற்றுமாய்...
நான் ரசிக்க
ஆயிரம் இருப்பினும்,
என்னை ரசித்த
உன்னையே நினைக்கிறேன்
என் பயணத்தில்...
அன்று உன்னைப் பார்த்தது,
அன்று உன்னுடன் பேசியது,
அன்று உன்னில் புதைந்தது,
என்று "அன்றையே"
நினைக்கச் செய்கிறாய்...
தனிமை துயரைப்
போக்குவதாய் எண்ணி,
என்னை தவிக்க விடுகிறாய்...
தடுமாற செய்கிறாய்...
விபரீத விளைவுகள
அறிந்தும் விரும்பியே
உன்னை நினைக்கிறேன்...
என் அனைத்துப் பயணங்களிலும்
உன்னுடனே பயணிக்கிறேன்
"தனியாக..."
- இவள்
மா.ஐஸ்வர்யா,
நோயாளிகளின் ஆலோசகர்,
கண் நீர் அழுத்தப் பிரிவு,
அரவிந்த் கண் மருத்துவமனை,
மதுரை - 20
Friday, July 9, 2010
உன் நினைவில்
என் மனதை,
உன் நினைவுகளால்
நிரப்பியுள்ளேன்...
என் இதயம்,
உன்னை நினைப்பதாலேயே
துடிக்கிறது...
நாளும் உன் நினைவில்
நீளும் என் ஆயுள்... Tuesday, June 29, 2010
Tuesday, June 15, 2010
அன்பு
அன்பு என்பது
கரும்பலகை அல்ல,
எழுதி எழுதி அழிப்பதற்கு...
அது,
கல்வெட்டு போன்றது
என்றும் நிலைத்திருக்கும்...
மண்ணோடு புதையும் வரை
நெஞ்சோடு வைத்திருப்பேன்
உன் நினைவுகளை...
Tuesday, June 1, 2010
Friday, May 28, 2010
உயிர்ச் சித்திரம்
அடி, முடி தேடினாலும்,
அகராதியை புரட்டினாலும்,
முழுமையான அர்த்தம்
அறிய முடியாத உயிர்ச் சித்திரம்.
நம் நட்பு தோழா...
அகராதியை புரட்டினாலும்,
முழுமையான அர்த்தம்
அறிய முடியாத உயிர்ச் சித்திரம்.
நம் நட்பு தோழா...
Thursday, May 20, 2010
சட்டி பானை காதல் கதை / கவிதை
காலம் என்னும் படுகையிலே,
களிமண் திட்டாய் நாம் கிடந்தோம்...
ஞாலகுயவன் நமை எடுத்து வனைந்தான்.
இரு வகை பாத்திரமாய்...
சட்டி என்று எனை சொன்னார்,
பானை என்பது உன் பெயராம்...
என்னில் கொதித்த உலை நீரை,
உன்னில் வடித்தல் என் நியதி...
என்னில் சமைத்த சோற்றோடு,
இனிதாய் இணையும் உன் குழம்பு...
அடுக்கி வைத்த அடுக்களையில்,
முடுக்கி வைத்த காதலுடன்...
எதனை தத்துவம் பேசுகிறோம்
எனினும் மனிதர் புரிவதில்லை...
கழுவி வைக்கும் வேளையிலே,
தழுவி கொள்வோம் தற்செயலாய்...
இணைந்த ஜென்ம பயணத்தில்,
இதயம் அழுத்தும் ஓர் கவலை...
வனைந்த பாண்டம் அத்தனையும்,
உடைந்தே தீரும் உலக விதி...
ஒன்றை இருவரும் உடைவோமா...!
மீண்டும் படுகை அடைவோமா...!
------ நாளேடு ஒன்றில் படித்தது...
Saturday, May 15, 2010
நானும் சிவந்தேன்
அந்திவானம்,
அலையில்லா கடலை அணைத்து
சிவப்பைப் பூசிக்கொள்ள
அதைக் கண்ட நானும் சிவந்தேன்
என்னில் உன் நினைவுகள் இருப்பதாலேயே...
Saturday, May 8, 2010
காதலா? நட்பா?
உன் மனதை எனக்கு கொடுத்துவிட்டு,
என் மனதை எதற்கு பறித்துக்கொண்டாய்?
காதலா இல்லை நட்பா,
எதுவாயினும் நீயே வென்றாக வென்றும்
ஏனெனில், வாழ்த்தாக வேண்டும் நீ...
விட்டுக்கொடுக்கிறேன் நமக்காக...
என் மனதை எதற்கு பறித்துக்கொண்டாய்?
காதலா இல்லை நட்பா,
எதுவாயினும் நீயே வென்றாக வென்றும்
ஏனெனில், வாழ்த்தாக வேண்டும் நீ...
விட்டுக்கொடுக்கிறேன் நமக்காக...
இரு விழிகள்
நட்பும் காதலும் இருவிழிகள்...
இங்கே,
ஒரு விழி போதுமென்றால்,
உன் வழியில் தெளிவில்லை...
இரு விழியும் வேண்டுமென்றால்,
என்னோடு கைகோர்த்து நட
இருவிழியைக் கொண்டு,
ஒருவழியில் நடப்போம்
அழகாக....!
இங்கே,
ஒரு விழி போதுமென்றால்,
உன் வழியில் தெளிவில்லை...
இரு விழியும் வேண்டுமென்றால்,
என்னோடு கைகோர்த்து நட
இருவிழியைக் கொண்டு,
ஒருவழியில் நடப்போம்
அழகாக....!
Saturday, April 24, 2010
தேடித் திரிகிறேன்
மணம் வீசும் உந்தன்
மனம் அறிவேன்...
மலர் அறியா தென்றலாய்,
உன்னைத் தேடித் திரிகிறேன்
இப்பூவுலகில்...
மனம் அறிவேன்...
மலர் அறியா தென்றலாய்,
உன்னைத் தேடித் திரிகிறேன்
இப்பூவுலகில்...
Wednesday, April 21, 2010
பிடிக்கிறது
கனவில் உன் நினைவு வருவதால்,
இரவைப் பிடிக்கிறது...
நினைவே நீயாக இருப்பதால்,
பகலை மிகவும் பிடிககிறது...
இரவைப் பிடிக்கிறது...
நினைவே நீயாக இருப்பதால்,
பகலை மிகவும் பிடிககிறது...
Thursday, April 15, 2010
இனிய குடும்பம்
இனிய குடும்பம்
இ - இருப்பதைக் கொண்டு
னி - நிறைவோடு வாழும்
ய - யதார்த்தமான குடும்பம்
இனிய குடும்பம்...
அன்பான கணவன்
அடக்கமான மனைவி
ஆஸ்திக்கொரு ஆண் மகனும்
ஆசைக்கொரு பெண் மகளுமாய்
அளவான குடும்பமும்
இனிய குடும்பமே...
வரவுக்கு மிஞ்சாத செலவாய்
செலவையும் மீறிய
சேமிப்பைக் கொள்ளும் குடும்பமும்
இனிய குடும்பமே...
அனைவரின் கருத்தையும்
அகத்தில் கொள்ளும் தலைவனும்,
அன்பே உருவான
புன்னகையை செம்மஞ்சலாய்
முகத்தில் பூசிய தலைவியும்,
அடங்கிய குடும்பமும்
இனிய குடும்பமே...
இருப்பதைக் கொண்டு
நிறைவோடு வாழும்
எல்லா குடும்பத்தின்
இலக்கணமும் இதுவே...
- இவள்
மா.ஐஸ்வர்யா,
நோயாளிகளின் ஆலோசகர்,
கண் நீர் அழுத்தப் பிரிவு,
அரவிந்த் கண் மருத்துவமனை,
மதுரை .
இ - இருப்பதைக் கொண்டு
னி - நிறைவோடு வாழும்
ய - யதார்த்தமான குடும்பம்
இனிய குடும்பம்...
அன்பான கணவன்
அடக்கமான மனைவி
ஆஸ்திக்கொரு ஆண் மகனும்
ஆசைக்கொரு பெண் மகளுமாய்
அளவான குடும்பமும்
இனிய குடும்பமே...
வரவுக்கு மிஞ்சாத செலவாய்
செலவையும் மீறிய
சேமிப்பைக் கொள்ளும் குடும்பமும்
இனிய குடும்பமே...
அனைவரின் கருத்தையும்
அகத்தில் கொள்ளும் தலைவனும்,
அன்பே உருவான
புன்னகையை செம்மஞ்சலாய்
முகத்தில் பூசிய தலைவியும்,
அடங்கிய குடும்பமும்
இனிய குடும்பமே...
இருப்பதைக் கொண்டு
நிறைவோடு வாழும்
எல்லா குடும்பத்தின்
இலக்கணமும் இதுவே...
- இவள்
மா.ஐஸ்வர்யா,
நோயாளிகளின் ஆலோசகர்,
கண் நீர் அழுத்தப் பிரிவு,
அரவிந்த் கண் மருத்துவமனை,
மதுரை .
Tuesday, April 13, 2010
தமிழ் புத்தாண்டு
வாழ்வில்
எல்லா
வளமும்,
நலமும்,
பெருக
அனைவருக்கும்
மனமார்ந்த
இனிய
தமிழ்
புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்...
Monday, March 29, 2010
காற்று
நான் வாழ,
என் இதயம் சுவாசிக்க,
எங்கு சென்றாலும்,
என்னை பின்தொடர்ந்து,
வரும் காற்று
உன் நினைவுகள்....
என் இதயம் சுவாசிக்க,
எங்கு சென்றாலும்,
என்னை பின்தொடர்ந்து,
வரும் காற்று
உன் நினைவுகள்....
Wednesday, March 24, 2010
அவ்வளவு அன்பு
உனக்கு என்மீது
அவ்வளவு அன்பு உள்ளதா
என்கிறாய்...?
என்னிடம் உள்ள அவ்வளவும்
உன்மீதான அன்புதான்
என்று தெரிந்தும்...
அவ்வளவு அன்பு உள்ளதா
என்கிறாய்...?
என்னிடம் உள்ள அவ்வளவும்
உன்மீதான அன்புதான்
என்று தெரிந்தும்...
Monday, March 22, 2010
Friday, March 19, 2010
Thursday, March 18, 2010
உயிர் வாழ்வேனோ...?
உயிர் கொடுப்பான் தோழன்
என்றுரைப்பதெல்லாம் பழமை...
என்னிடத்தில் உள்ளதே
உந்தன் உயிர் தானே... அதை
கொடுத்துவிட்டு ஒரு கணமேனும்
உயிர் வாழ்வேனோ...?
என்றுரைப்பதெல்லாம் பழமை...
என்னிடத்தில் உள்ளதே
உந்தன் உயிர் தானே... அதை
கொடுத்துவிட்டு ஒரு கணமேனும்
உயிர் வாழ்வேனோ...?
Tuesday, March 16, 2010
உன் நினைவுகளே வேண்டும்
முடிவில்லா வானில்
நான் பறக்க
முகவரியாய் தென்பட்ட
உன் நட்பை,
எத்தனை இடையூறுகள் வந்தாலும்
என் உயிர் உன்னை
இழப்பதில்லை தோழா...
உயிரினை தாங்க
உன் நினைவுகளே வேண்டும்
என்றும் எனக்கு...
நான் பறக்க
முகவரியாய் தென்பட்ட
உன் நட்பை,
எத்தனை இடையூறுகள் வந்தாலும்
என் உயிர் உன்னை
இழப்பதில்லை தோழா...
உயிரினை தாங்க
உன் நினைவுகளே வேண்டும்
என்றும் எனக்கு...
Saturday, March 6, 2010
மீண்டும்
என் இதயத்தை வருடிச் சென்ற
இதமான நினைவுகளோடு
மீண்டும் கருவாக
ஆசைப் படுகிறேன்...
தொட்டுவிட முடியாத தூரத்தில்
நீயும் நானும்...
நீ பேசிய வார்த்தைகள்
நீங்காத நினைவுகளாய்
உயிர் பெற்றன என்னிடத்தில்...
இதமான நினைவுகளோடு
மீண்டும் கருவாக
ஆசைப் படுகிறேன்...
தொட்டுவிட முடியாத தூரத்தில்
நீயும் நானும்...
நீ பேசிய வார்த்தைகள்
நீங்காத நினைவுகளாய்
உயிர் பெற்றன என்னிடத்தில்...
Monday, February 15, 2010
என்ன செய்தாய்
கண்ணீர் சிந்தும் நண்பனை
கண்களில் வைக்கவேண்டும்...
கண்ணீர் சிந்தவிடாமல் காப்பவனை
இதயத்தில் வைக்கவேண்டும்...
அப்படியென்றால்,
நீ என்ன செய்தாய்...?
உன்னை என் உயிரினில் வைத்தேன்...
கண்களில் வைக்கவேண்டும்...
கண்ணீர் சிந்தவிடாமல் காப்பவனை
இதயத்தில் வைக்கவேண்டும்...
அப்படியென்றால்,
நீ என்ன செய்தாய்...?
உன்னை என் உயிரினில் வைத்தேன்...
மனம் வாடும்
செடியை விட்டுப் பிரிந்தால்,
மலர் வாடும்...
உன் நினைவை விட்டுப் பிரிந்தால்,
என் மனம் வாடும்...
மலர் வாடும்...
உன் நினைவை விட்டுப் பிரிந்தால்,
என் மனம் வாடும்...
Thursday, February 11, 2010
அதிகரிக்கிறது
அதிகரித்துக் கொண்டிருப்பது
உன்னுடன் பேசாத
நாட்கள் மட்டுமல்ல...
உன் மீதான
என் அன்பும்தான்...
உன்னுடன் பேசாத
நாட்கள் மட்டுமல்ல...
உன் மீதான
என் அன்பும்தான்...
Wednesday, February 10, 2010
பொறாமை
உன்னை எப்போதும்
நினைதுக்கொண்டிருப்பது நான்...
ஆனால், நீ இருப்பதோ
அவனிடத்தில்...?
இதயத்தின் மீது
மூளைக்கு பொறாமை...
நினைதுக்கொண்டிருப்பது நான்...
ஆனால், நீ இருப்பதோ
அவனிடத்தில்...?
இதயத்தின் மீது
மூளைக்கு பொறாமை...
Monday, February 8, 2010
Saturday, February 6, 2010
Sunday, January 31, 2010
Wednesday, January 27, 2010
வருந்துகிறேன்
என் வாழ்நாள் குறைகிறது
என்பதற்காக வருந்தவில்லை...
உன் நினைவில்
வாழும் நாள் குறைகிறது
என்பதற்காக வருந்துகிறேன்...
என்பதற்காக வருந்தவில்லை...
உன் நினைவில்
வாழும் நாள் குறைகிறது
என்பதற்காக வருந்துகிறேன்...
Monday, January 25, 2010
Wednesday, January 20, 2010
பஞ்சம்
கல்தோன்றி மண்தோன்றா
காலத்தே முன்தோன்றிய
என் தமிழிலும்
வார்த்தைப் பஞ்சம்
உன்னைப் பற்றி
கவிதை எழுதும்போது...
காலத்தே முன்தோன்றிய
என் தமிழிலும்
வார்த்தைப் பஞ்சம்
உன்னைப் பற்றி
கவிதை எழுதும்போது...
Tuesday, January 19, 2010
Monday, January 18, 2010
Tuesday, January 12, 2010
Saturday, January 9, 2010
Friday, January 8, 2010
Wednesday, January 6, 2010
Monday, January 4, 2010
உன்னைக் காண்கிறேன்
அருகில் இருக்கும் இமைகளைக்கூட
காண முடியாத என் கண்கள்,
தொலைவில் இருக்கும் உன்னை மட்டும்
எவ்வாறு காண்கின்றன...?
ஆம்,
என் கண்கள் காணும்
ஒவ்வொரு நல்லவைகளிலும்
உன்னையே காண்கிறேன்...
இந்த உலகில் உள்ள
நல்லவைகள் அனைத்தையும்
ஒன்று சேர்த்து,
ஒரே உருவமாக்கி,
அதற்க்கு உயிரும் கொடுத்தால்,
அது நீயாக அல்லவா இருக்கும்...
காண முடியாத என் கண்கள்,
தொலைவில் இருக்கும் உன்னை மட்டும்
எவ்வாறு காண்கின்றன...?
ஆம்,
என் கண்கள் காணும்
ஒவ்வொரு நல்லவைகளிலும்
உன்னையே காண்கிறேன்...
இந்த உலகில் உள்ள
நல்லவைகள் அனைத்தையும்
ஒன்று சேர்த்து,
ஒரே உருவமாக்கி,
அதற்க்கு உயிரும் கொடுத்தால்,
அது நீயாக அல்லவா இருக்கும்...
Friday, January 1, 2010
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
முயலும் வெல்லும்...
ஆமையும் வெல்லும்...
முயலாமை மட்டுமே தோற்கும்...
ஆமையும் வெல்லும்...
முயலாமை மட்டுமே தோற்கும்...
முயற்சிகள் தவறலாம்...
முயற்சிக்க தவறலாமோ...
உங்களின் அனைத்து முயற்சிகளும்
வெற்றிபெற வாழ்த்துக்கள்...
அனைவருக்கும்
இனிய புத்தாண்டு 2010
நல்வாழ்த்துக்கள்...
Subscribe to:
Posts (Atom)