Monday, March 29, 2010

காற்று

நான் வாழ,
என் இதயம் சுவாசிக்க,
எங்கு சென்றாலும்,
என்னை பின்தொடர்ந்து,
வரும் காற்று
உன் நினைவுகள்....

Wednesday, March 24, 2010

அவ்வளவு அன்பு

உனக்கு என்மீது
அவ்வளவு அன்பு உள்ளதா
என்கிறாய்...?
என்னிடம் உள்ள அவ்வளவும்
உன்மீதான அன்புதான்
என்று தெரிந்தும்...

Monday, March 22, 2010

எனதுயிர்

உன்னை நினைத்துக்கொண்டு
வாழவில்லை...
உன்னை நினைப்பதினாலேயே
வாழ்கிறது...
எனதுயிர்....

Friday, March 19, 2010

இருக்காது

உனக்குள் என் நினைவும்,
எனக்குள் உன் நினைவும்
இருக்கும் வரை
இருக்காது
நமக்குள் பிரிவு...

Thursday, March 18, 2010

உயிர் வாழ்வேனோ...?

உயிர் கொடுப்பான் தோழன்
என்றுரைப்பதெல்லாம் பழமை...
என்னிடத்தில் உள்ளதே
உந்தன் உயிர் தானே... அதை
கொடுத்துவிட்டு ஒரு கணமேனும்
உயிர் வாழ்வேனோ...?

Tuesday, March 16, 2010

உன் நினைவுகளே வேண்டும்

முடிவில்லா வானில்
நான் பறக்க
முகவரியாய் தென்பட்ட
உன் நட்பை,
எத்தனை இடையூறுகள் வந்தாலும்
என் உயிர் உன்னை
இழப்பதில்லை தோழா...
உயிரினை தாங்க
உன் நினைவுகளே வேண்டும்
என்றும் எனக்கு...

Saturday, March 6, 2010

மீண்டும்

என் இதயத்தை வருடிச் சென்ற
இதமான நினைவுகளோடு
மீண்டும் கருவாக
ஆசைப் படுகிறேன்...

தொட்டுவிட முடியாத தூரத்தில்
நீயும் நானும்...
நீ பேசிய வார்த்தைகள்
நீங்காத நினைவுகளாய்
உயிர் பெற்றன என்னிடத்தில்...