Thursday, February 24, 2011

நீ இல்லாத நேரங்களில்

நீ இல்லாத நேரங்களில்,
என் இதயத்தோடு தான்
பேசிக்கொள்கிறேன்...
எனக்காக,
துடிப்பது அது தானே...
உன்னைப் போல...

Saturday, February 12, 2011

வரமும் தவமும்

உன்னோடு இருப்பதற்கும்
உன் நினைவோடு இருப்பதற்கும்
சிறு வித்தியாசம் தான்...

உன்னோடு இருப்பது "வரம்"
உன் நினைவோடு இருப்பது "தவம்"

இனிய காதலர் தின வாழ்த்துக்கள்...

Friday, February 4, 2011

அன்னை


அன்னையை பார்க்கும் போது,
உன்னை மறந்து போகிறேன்...
ஆனால்,
உன்னை பார்க்கும் போது
அன்னையை நினைவுபடுத்துகிறாய்...

Thursday, January 27, 2011

உன்னுடன்

உன்னுடன் பேசுகிறேன்...
உன்னுடன் நடக்கிறேன்...
உன்னுடன் ஓடுகிறேன்...
உன்னுடன் பாடுகிறேன்...
உன்னுடன் ஆடுகிறேன்...
உன்னுடன் சிரிக்கிறேன்...
உன்னுடன் அழுகிறேன்...
எல்லாமே உன்னுடன்தான்...

என்னுடன் இருக்கும் உன்னை
வேறு யாருக்கும் தெரிவதில்லை...

என்னை
ஏதேதோ பெயர்களில்
அழைக்கிறார்கள்...
எல்லா அழைப்புகளும்
உன் பெயர்களாகவே கேட்க்கிறது...

என்னை யாராவது
பைத்தியம் என்றழைத்தால்
மட்டும்
உன்னுடன் கோபம்கொள்கிறேன்....!!!

Wednesday, January 12, 2011

உயிர் வாழ்வேன்

சுவாசிக்க
காற்று இல்லையென்றாலும்
நான் உயிர் வாழ்வேன்...

நேசிக்க
நீ
இருக்கும் வரை...

Tuesday, January 11, 2011

நான்

நினைக்கும் போது
உன் அருகினில் இருப்பவள்
அல்ல நான்...
நீ அருகினில் இல்லாத போதும்
உன்னையே
நினைத்துக்கொண்டு இருப்பவள்
என்றும்...

Saturday, January 8, 2011

உன் ஒற்றைப் பார்வை

சந்திக்கும் வேளைகளில்
சிந்திக்க நேரமில்லை
உன்னுடன் பேச
நான் இட்ட பட்டியல்களை...

முகம் பார்க்க முடியாமல்
வெட்கத்தின் போர்வையில்
மண்ணைக் கிளரும் கோழியாக
உன் முன்
தலை குனிந்தபடி நான்...

கவிதை சொல் endru
கேட்க்கும் உன்னிடம்
நொடிக்கொரு முறை
என் மௌனம் உச்சரிக்கும்
உந்தன் பெயர்
உன் காதில் விழவில்லையா? என
எப்படிக் கேட்பேன்...

அம்மாவின் நெற்றி முத்தம்...
அப்பாவின் கேச வருடல்...
அண்ணனின் செல்ல அடி...
நண்பனின் தோள் அணைப்பு...
என அத்தனையையும்
ஒரே நொடியில் தருகிறது
உன் ஒற்றைப் பார்வை...


- இவள்
மா.ஐஸ்வர்யா,
நோயாளிகளின் ஆலோசகர்,
கண் நீர் அழுத்தப் பிரிவு,
அரவிந்த் கண் மருத்துவமனை,
மதுரை - 20

Saturday, January 1, 2011

இனிய புத்தாண்டு 2011 வாழ்த்துக்கள்

கவலைகளை சுமந்து
கண்ணீர் சிந்துவதை விட,
லட்சியங்களை சுமந்து
ரத்தம் சிந்து….
உலகம் உன்னை போற்றும்...

இந்த புதிய வருடம்
உனது இலட்சியங்கள்
அனைத்தும் நிறைவேற
இறைவனை வேண்டிகொள்கிறேன்…

அனைவருக்கும்
இனிய
புத்தாண்டு 2011
வாழ்த்துக்கள்...

Tuesday, December 28, 2010

உன் கோவமும் அன்பும்

உன் கோவம்
உன்னை நேசிப்பவர்களை
யோசிக்க வைக்கும்...
ஆனால்,
உன் அன்பு,
உன்னை வெறுப்பவர்களையும்
நேசிக்க வைக்கும்...

உணர்ந்தேன்

பிறப்பை
நான் பிறந்து
உணர்ந்தேன்...
இறப்பை
நான் இறக்காமல்
உணர்ந்தேன்...

நீ இல்லாத நேரங்களில்...