Friday, July 31, 2009

கடலும் துளியே

துளியே கடல்
என்கிறது காதல்...

கடலும் துளியே
என்கிறது உன் நட்பு...

உன்னக்காக..

எனக்கு
அழுவதுகூட
மிகவும்
பிடிக்கிறது
அது
உன்னக்காக
எனும்போது..

Wednesday, July 29, 2009

உன் நினைவுகளில்

என்னிடம்
உன் நினைவுகள்
இல்லவே இல்லை...
உன் நினைவுகளில்தான்
நான் இருக்கிறேன்...

அனாதை

அன்னையை
இழந்த
அனாதையின்
நினையை
உணர்கிறேன்
உன் பிரிவில்...

எனக்கு சம்மதமே

நீ கிடைக்கலாம்
கிடைக்காமல் போகலாம்...
ஆனால்,
உன்னால் கிடைக்கும்
எதுவும் எனக்கு சம்மதமே...

Wednesday, July 22, 2009

என் மனம்!!!!

இதயம் கூட
இடைவெளி விட்டுதான்
துடிக்கும் தினம்!!
அந்த
இடைவெளியில் கூட
உன்னைப் பற்றிதான்
நினைக்கும் என் மனம்!!!!

நீ இருக்கும் வரை...

நான் உயிர்த்திருப்பேன்
என் இதயம் துடிக்கும் வரை...

என் இதயம் துடித்திருக்கும்
அதில் நீ இருக்கும் வரை...

எனது கண்ணீர்

வானத்தின் கண்ணீர்
பூமிக்கு மழையானது..
பூமியின் கண்ணீர்
புற்களில் பனித்துளியானது..
எனது கண்ணீர்
உனக்காக கவிதையானது..

உன் வார்த்தைகள்

நீ என்னிடம் பேசியதை விட
எனக்காக பேசிய போதுதான
உணர்ந்தேன் உன் நட்பின் ஆழத்தை....
என்றும் கேட்கும்

உன் வார்த்தைகள்
என் காதினில் மெலிசையாய்....

என்றும் வாழும்

மனிதர்கள் இறந்து போகலாம்
நினைவுகள் இறப்பதில்லை...
என்னுள் மேலும் ஓர் உயிராய்
என்றும் வாழும்உன் நினைவுகள்!!!!!

இன்னும் ஓர் உயிர்

இந்த உலகில் ரசித்து மகிழ,
எத்தனையோ இருந்தாலும்...
அனைத்தையும் மறந்து ரசித்தேன்
உன் நினைவுகளை மட்டும்...

மரணமில்லா உன் நினைவுகள்
இன்னும் ஓர் உயிர் அல்லவா எனக்கு.....

உயிர் உள்ளவரை

காரணம் இல்லாமல்
கலைந்து போக
இது கனவும் இல்லை.....

காரணம்சொல்லி
பிரிந்து போக
அது காதலும் இல்லை

உயிர் உள்ளவரை
இருக்கும் நமது நட்பு.....

நட்பு

சிறகுகள்
கிடைத்தவுடன்
பறப்பதல்ல நட்பு....

சிலுவைகள்
கிடைத்தாலும்
சுமப்பதே நட்பு....

என் உயிராக....

மரணமே வந்தாலும்
உன்னை மறக்காத

இதயம் வேண்டும்...

மீண்டும் ஜனனம் என்றால்,

அதில் நீயே வேண்டும்
உரவாக அல்ல
என் உயிராக....

எப்ப‌டி ம‌ற‌ப்ப‌து..?

இத‌ய‌த்தில்
நீ இருந்தால்
ம‌ற‌ந்து விட‌லாம்..

இத‌ய‌மே
நீயாக‌ இருந்தால்
எப்ப‌டி ம‌ற‌ப்ப‌து..?