Tuesday, June 29, 2010

என் உலகம்

உலகிற்கு,
நீ யாரோ...!
எனக்கு,
நீயே உலகு...!

Tuesday, June 15, 2010

அன்பு

அன்பு என்பது
கரும்பலகை அல்ல,
எழுதி எழுதி அழிப்பதற்கு...
அது,
கல்வெட்டு போன்றது
என்றும் நிலைத்திருக்கும்...
மண்ணோடு புதையும் வரை
நெஞ்சோடு வைத்திருப்பேன்
உன் நினைவுகளை...

Tuesday, June 1, 2010

ஒன்றே

இரவு பகல் இரண்டானாலும்
நாள் என்பது ஒன்றே...
கண்கள் இரண்டானாலும்
பார்வை என்பது ஒன்றே...
சிறகுகள் இரண்டானாலும்
பறப்பது என்பது ஒன்றே...
இதயம் இரண்டானாலும் - நம்
அன்பு என்பது ஒன்றே...

எளிது

இறப்பது எளிதே
எனக்கு...
உன்னை
மறப்பதைக் காட்டிலும்...