Thursday, April 15, 2010

இனிய குடும்பம்

இனிய குடும்பம்
இ - இருப்பதைக் கொண்டு
னி - நிறைவோடு வாழும்
ய - யதார்த்தமான குடும்பம்
இனிய குடும்பம்...

அன்பான கணவன்
அடக்கமான மனைவி
ஆஸ்திக்கொரு ஆண் மகனும்
ஆசைக்கொரு பெண் மகளுமாய்
அளவான குடும்பமும்
இனிய குடும்பமே...

வரவுக்கு மிஞ்சாத செலவாய்
செலவையும் மீறிய

சேமிப்பைக் கொள்ளும் குடும்பமும்
இனிய குடும்பமே...

அனைவரின் கருத்தையும்
அகத்தில் கொள்ளும் தலைவனும்,
அன்பே உருவான
புன்னகையை செம்மஞ்சலாய்
முகத்தில் பூசிய தலைவியும்,
அடங்கிய குடும்பமும்
இனிய குடும்பமே...

இருப்பதைக் கொண்டு
நிறைவோடு வாழும்
எல்லா குடும்பத்தின்
இலக்கணமும் இதுவே...

- இவள்
மா.ஐஸ்வர்யா,
நோயாளிகளின் ஆலோசகர்,
கண் நீர் அழுத்தப் பிரிவு,
அரவிந்த் கண் மருத்துவமனை,
மதுரை .

2 comments:

  1. வாணி,

    இனிய கவிதை.

    ReplyDelete
  2. 2 சத்ரியன்
    வருகைக்கும் வாழ்த்தியமைக்கும்
    நன்றி தோழா...

    ReplyDelete