Saturday, January 8, 2011

உன் ஒற்றைப் பார்வை

சந்திக்கும் வேளைகளில்
சிந்திக்க நேரமில்லை
உன்னுடன் பேச
நான் இட்ட பட்டியல்களை...

முகம் பார்க்க முடியாமல்
வெட்கத்தின் போர்வையில்
மண்ணைக் கிளரும் கோழியாக
உன் முன்
தலை குனிந்தபடி நான்...

கவிதை சொல் endru
கேட்க்கும் உன்னிடம்
நொடிக்கொரு முறை
என் மௌனம் உச்சரிக்கும்
உந்தன் பெயர்
உன் காதில் விழவில்லையா? என
எப்படிக் கேட்பேன்...

அம்மாவின் நெற்றி முத்தம்...
அப்பாவின் கேச வருடல்...
அண்ணனின் செல்ல அடி...
நண்பனின் தோள் அணைப்பு...
என அத்தனையையும்
ஒரே நொடியில் தருகிறது
உன் ஒற்றைப் பார்வை...


- இவள்
மா.ஐஸ்வர்யா,
நோயாளிகளின் ஆலோசகர்,
கண் நீர் அழுத்தப் பிரிவு,
அரவிந்த் கண் மருத்துவமனை,
மதுரை - 20

No comments:

Post a Comment