Monday, December 7, 2009

உன் பார்வை

இரவு முழுவது விழித்திருந்தேன்
விடியும் வரைக் காத்திருந்தேன்
சூரியனைக் கண்ட மலர்போல
மலர்கிறேன்
உன்னைப் பார்த்ததும்...

5 comments:

  1. இரவுகூட
    உறவில்லை எனக்கு
    உன் வரவு வரும்வரை...

    ReplyDelete
  2. உரையாடல் கவிதை போட்டிக்கான
    எனது கவிதை உங்கள் விமர்சனம் எதிர்பார்கின்றேன்..

    (நீங்கள் ஏன் மற்ற தளங்களை பார்ப்பதும் விமர்சனம் தருவதுமில்லை )

    ஏன் எனது தளத்தில் கூட நீங்கள் விமர்சனம் தரவில்லை ஏன்????????)

    http://sankar-mylyrics.blogspot.com/2009/12/blog-post.html

    ReplyDelete
  3. நான் ஒவ்வொரு முறையும் என்னுடைய கணினியை திறக்கும்போதெல்லாம் அனைவரின் வலைப்பதிவுகளையும் தவறாமல் பார்த்து மிகவும் ரசிப்பேன். (அதில் உங்களின் வலை தளதிர்க்கே முதலிடம் என்று சொல்லலாம்.) மற்ற தோழர் தோழிகளின் வலைப் பதிவுகளை பார்க்கும் பொழுது எனக்கு மிகவும் வியப்பாக இருக்கும். அவர்களின் கவிதைகள், கதைகள், வலைதள அமைப்பு என அனைத்தும் என்னை கவரும் வண்ணம் இருக்கும். அவற்றை பார்க்கும் பொழுது என்ன கூறுவது என்றே தெரியாமல் வியப்பில் அமைதியாகிவிடுவேன். என்னை விட அனைவரும் நன்றாகவே எழுதுகிறார்கள் என்பதால் என்னால் ரசிக்க மட்டுமே தோன்றுகிறது. விமர்சிக்க விமர்சிக்க வேண்டும் என்றால் "நன்றாக இருக்கிறது" என்ற ஒரு வார்த்தையை தவிர வேறு ஒன்றும் தெரிய வில்லை.

    உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் உங்களின் "உரையாடல் கவிதை போட்டிக்கான கவிதைக்கு" வந்த விமர்சனங்களையே சொல்லலாம். நிறைய நண்பர்கள் மிகவும் அருமையாகவும், சரியாகவும் கூறி இருந்தார்கள். அதுபோல எனக்கு விமர்சிக்க தெரிவதில்லை.

    விமர்சிப்பதும் ஒரு தனி திறமை தான். எனக்கு அது கொஞ்சம் குறைவு. எனக்கு ரசிக்க மட்டுமே தெரியும் என நான் எண்ணுகிறேன். விமர்சிக்காமல் இருந்ததற்காக அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள். இத்தவறு இனி நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன். விமர்சிக்கும் திறமையை வளர்த்துக்கொள்கிறேன்.

    மன்னித்து விடுங்கள் தோழர் தோழிகளே...

    ReplyDelete
  4. விமர்சனங்கள்
    ஒரு கவிஞனை இன்னும்
    தன்னை தீட்டிக்கொள்ள உதவும்..
    ஒப்பீடு வேண்டாம் நீங்கள் உங்களில் உயர்வே..
    உயரப்பறங்கள்
    உங்களிள் நீங்களே
    உணரப்படுவீர்கள்..



    எமை மதித்து விளக்கம் தந்தமைக்கு
    பெருமகிழ்ச்சி..



    நன்றி தோழி..

    ReplyDelete
  5. தெளிவு படுத்தியமைக்கு நன்றி...
    உங்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது என் கடமை...

    ReplyDelete